தமிழகத்தில் ஆட்டோ, பேருந்துகள், ரயில்கள் ஓடாது – முழு ஊரடங்கு எதிரொலி! அரசு அதிரடி!
தமிழகத்தில் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக நாளை (09.01.2021) மாநிலம் முழுவதும் முழு ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய தேவைகளை தவிர பிற அனைத்து சேவைகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
முழு ஊரடங்கு:
தமிழகத்தில் கடந்த இரு வாரங்களாகவே கொரோனா மற்றும் ஓமிக்ரான் தொற்று அதிகரித்து வருகிறது. இதுவரை தமிழகத்தில் 121 பேருக்கு ஓமிக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதே போல கொரோனா பரவலும் அதிகரித்து வருகிறது. அதனால் மாநிலம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் தடுப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. தடுப்பூசிகள் தொற்றிலிருந்து உடலை பாதிக்கும் காக்கும். மேலும் தடுப்பூசி வைரஸ் தொற்றுக்கு எதிரான பேராயுதம் என்பதால் விரைந்து தடுப்பூசிகளை செலுத்த அறிவுறுத்தி வருகிறது. மேலும் இரவு நேர ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து ஞாயிற்று கிழமைகளில் முழு ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டுள்ளது.
TNPSC தேர்விற்கு தயாராகி வருவோர் கவனத்திற்கு – மசோதா குறித்த முழு விபரம்!
நாளை அதிகாலை 5 மணி முதல் திங்கட் கிழமை காலை 5 மணி வரை இந்த முழு ஊரடங்கு அமலில் இருக்கும் என்று அரசு தெரிவித்துள்ளது. இந்த முழு ஊரடங்கு நாளில் அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பொது போக்குவரத்து முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளது. சென்னையில் 2,500 பஸ்கள் பல்வேறு வழித்தடங்களில் இயக்கப்படும். இந்த பஸ்கள் அனைத்தும் நாளை முழுமையாக நிறுத்தப்படுகிறது. ஆட்டோக்கள் ஓடுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.மின்சார ரயில்களை பொறுத்தவரை 50 சதவீதம் நாளை இயக்கப்படுகின்றன.
உ.பி., பஞ்சாப், உத்தரகாண்ட் உட்பட 5 மாநில தேர்தலுக்கான தேதிகள் – தலைமை ஆணையர் அறிவிப்பு!
முன்களப் பணியாளர்கள் மற்றும் அத்தியாவசிய துறை ஊழியர்கள் செல்வதற்காக மின்சார ரயில் இயக்கப்படுகிறது. கொரோனா விதிமுறைகளை பின்பற்றி பயணிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. விமானம், ரயில் பயணம் மேற்கொள்பவர்கள் தங்களது சொந்த வாகனங்களிலோ அல்லது வாடகை வாகனங்களிலோ செல்லலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் பயணத்தின் போது அதற்கான டிக்கெட்டை வைத்திருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.