உ.பி., பஞ்சாப், உத்தரகாண்ட் உட்பட 5 மாநில தேர்தலுக்கான தேதிகள் – தலைமை ஆணையர் அறிவிப்பு!

0
உ.பி., பஞ்சாப், உத்தரகாண்ட் உட்பட 5 மாநில தேர்தலுக்கான தேதிகள் - தலைமை ஆணையர் அறிவிப்பு!
உ.பி., பஞ்சாப், உத்தரகாண்ட் உட்பட 5 மாநில தேர்தலுக்கான தேதிகள் - தலைமை ஆணையர் அறிவிப்பு!
உ.பி., பஞ்சாப், உத்தரகாண்ட் உட்பட 5 மாநில தேர்தலுக்கான தேதிகள் – தலைமை ஆணையர் அறிவிப்பு!

இந்தியாவில் ஓமைக்ரான் பரவல் பல்வேறு மாநிலங்களில் வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில் உத்தரப்பிரேதசம், மணிப்பூர், பஞ்சாப், கோவா, உத்தரகாண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் தேர்தல் பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது தொடர்பாக கூடுதல் தகவல்களை பற்றி பார்ப்போம்.

தேர்தல் நாட்கள்

இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் கொரோனா பரவல் தற்போது அதிகரித்து வருகிறது. அத்துடன் ஓமைக்ரான் பரவலும் வேகமாக பரவி பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனால் ஓமைக்ரான் மற்றும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த பல்வேறு ஊரடங்கு கட்டுப்பாடுகளை அரசு அறிவித்து வருகிறது. இந்தியாவில் உத்தர பிரதேசம், மத்தியப் பிரதேசம், கர்நாடகா, ஹரியானா, டெல்லி, மணிப்பூர், தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு கட்டுப்பாட்டை அமல்படுத்தியுள்ளது.

TNPSC தேர்வு முடிவுகள் 2022 – தேர்வாணைய உறுப்பினர் முக்கிய அறிவிப்பு!

இந்நிலையில் உத்தர பிரதேசம், உத்தரகண்ட், பஞ்சாப், கோவா, மணிப்பூர் ஆகிய ஐந்து மாநிலங்களில் சட்டசபை தேர்தல்கள் வரும் பிப்ரவரி, மார்ச் மாதங்களில் நடக்க இருக்கிறது. இதற்கான தேர்தல் நாட்களை பற்றிய அறிவிப்புகள் வெளி வந்துள்ளது. அதன்படி உத்தரப்பிரதேசத்தில் பிப்.10, பிப்.14, பிப்.20, பிப்.23, பிப்.27, மார்ச் 3, மார்ச் 7 என்று 7 கட்டமாக தேர்தலை நடத்த உள்ளதாக இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுஷில் சந்திரா அறிவித்துள்ளார். இதையடுத்து மணிப்பூரில் 60 தொகுதி இருப்பதால் 2 கட்டமாக தேர்தல் நடத்த உள்ளதாகவும் பிப்ரவரி 27 மற்றும் மார்ச் 3ஆம் தேதிகளில் வாக்குப்பதிவு நடைபெறும் என்றும் ஆணையர் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் ஜனவரி 10ம் தேதி மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!

அடுத்ததாக பஞ்சாப், கோவா, உத்தராகண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் பிப்ரவரி 14ம் தேதி ஒரே ஒரு கட்ட தேர்தலை நடத்த திட்டமிட்டுள்ளது. இதில் பஞ்சாப்பில் மாநிலத்தில் 117 தொகுதிகளும், கோவாவில் 40 தொகுதிகளும் , உத்தராகண்ட் மாநிலத்தில் 70 தொகுதிகளும் உள்ளது. இத்தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் பிப்ரவரி 1ம் தேதி முதல் தொடங்க உள்ளது. அத்துடன் வேட்புமனு பரிசீலனை பிப்ரவரி 9ம் தேதி நடைபெற உள்ளது. இத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு பிப்ரவரி 27 மற்றும் மார்ச் 3ம் நாட்களில் நடைபெறும். இந்த 5 மாநிலங்களிலும் மார்ச் 10ஆம் தேதி அன்று நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!