TNPSC தேர்வு முடிவுகள் 2022 – தேர்வாணைய உறுப்பினர் முக்கிய அறிவிப்பு!
இன்று நடந்துள்ள நகர் ஊரமைப்பு சார் நிலை பணிகளில் கட்டிடக்கலை திட்ட உதவியாளர் பணிக்கான தேர்வுகளை ஆய்வு செய்த தேர்வாணையத்தின் உறுப்பினர் ஆரோக்கியராஜ் தேர்வு முடிவுகள் உடனடியாக வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளார்.
தேர்வு முடிவுகள்:
கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்று பாதிப்புகள் காரணமாக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வுகள் நடத்தப்படாமல் நிலுவையில் வைக்கப்பட்டிருந்தது. கடந்த சில மாதங்களாக கொரோனா நிலைமை சீரடைந்து வந்த நிலையில் ஒரு சில தேர்வுகள் நடத்துவதற்கு தேர்வாணையம் கடந்த மாதம் ஆலோசனை நடத்தி ஒரு சில தேர்வுகளை நடத்துவதற்கான தேதிகளையும் வெளியிட்டு அறிவிப்புகளை வெளியிட்டது. அரசு பணியாளர் தேர்வாணையம் பல புதிய மாற்றங்களை அரசு தேர்வுகளில் அறிமுகப்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் ஜனவரி 10ம் தேதி மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
இது தொடர்பான முழுமையான அறிக்கைகள் அரசின் அதிகாரப்பூர்வ இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வர்கள் அங்கு சென்று முக்கிய விவரங்களை அறிந்து கொள்ளலாம். இந்நிலையில், இன்று தேர்வாணையம் முன்னதாக நடத்த திட்டமிட்டிருந்த நகர் ஊரமைப்பு சார் நிலை பணிகளில் கட்டிடக்கலை திட்ட உதவியாளர் பணிக்கான தேர்வு நடந்தது. தேர்வு நடக்கும் போது மந்தை வெளியில் இருந்த தேர்வு மையத்தில் தேர்வாணையத்தின் உறுப்பினர் ஆரோக்கியராஜ் அவர்கள் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அதன்பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
மத்திய அரசு வழங்கும் ரூ.2000 – கிசான் திட்ட விவசாயிகள் கவனத்திற்கு! 10வது தவணை தொகை!
அப்போது, தேர்வுகள் மிகவும் பாதுகாப்பாக, அனைத்து கொரோனா கால கட்டுப்பாடுகளையும் பின்பற்றி தேர்வுகள் நடந்துள்ளதாகவும் கூறினார். அரசின் திட்டங்களையும் ஒதுக்கீடுகளையும் மக்கள் அதிகம் பாராட்டி வருகின்றனர். தேர்வின் முடிவுகளை உடனடியாக வெளியிட நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் கூறினார். மற்ற தேர்வுகளையும் விரைவாக நடத்த அரசு தயாராக இருப்பதாகவும் கொரோனா கால நோய் பரவல் காரணமாக தாமதமாவதாகவும் கூறினார். நிலைமை சீரடைந்த பின்னர் அனைத்து தேர்வுகளும் அடுத்தடுத்து இதே போல் நடத்தப்படும் என்றும் கூறினார்.