தமிழகத்தில் ஜனவரி 10ம் தேதி மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
தமிழகத்தில் ஜனவரி 10ம் தேதி திங்கட்கிழமை அன்று கோவில்பட்டி மின் விநியோக பிரிவிற்குட்பட்ட அறிஞர் அண்ணா நகர் பகுதியில் மின் விநியோகம் நிறுத்தப்பட்டு மின்தடை ஏற்படும் என கோவில்பட்டி கோட்ட மின்வாரிய செயற்பொறியாளர் (பொ) முனியசாமி அறிவித்துள்ளார்.
மின்தடை ஏற்படும் பகுதிகள்:
தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள துணை மின் நிலையங்களில் மாதம்தோறும் மின் ஊழியர்கள் மூலம் பராமரிப்பு பணிகள் நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் தற்போது பதவி ஏற்றுள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அனைத்து துறைகளிலும் சிறப்பான திட்டத்தை செயல்படுத்தி வருகிறார். மின்வாரிய துறையில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். இந்த அடிப்படையில் மின்கம்பங்களில் ஏற்படும் மின்கசிவு காரணமாக அதிக மின் விநியோகித்தால் பல விபத்துகள் ஏற்படுகிறது. இந்த மாதிரியான விபத்துகளை தடுப்பதற்கு தமிழக மின் வாரியம், பராமரிப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறது.
கொரோனா தடுப்பூசி போடாதவர்கள் பணி நீக்கம் – பிரபல நிறுவனம் அதிரடி அறிவிப்பு!
இந்த வகையில் மின் பராமரிப்பு பணிகள் துணை மின் நிலையத்தில் நடைபெறும் போது , மின் வாரிய ஊழியர்கள் மற்றும் பொது மக்களின் நலன் அடிப்படையில் மின்விநியோகம் சில மணி நேரம் நிறுத்தப்பட்டு மின்தடை ஏற்படும். இந்த மின்தடை குறித்த அறிவிப்பு அந்தந்த மாவட்ட மின்வாரிய செயற்பொறியாளருக்கு முன்னதாகவே அறிவிக்கப்படும். ஜனவரி 10ம் தேதி திங்கட்கிழமை அன்று கோவில்பட்டி மின் விநியோகம் பிரிவிற்குட்பட்ட அறிஞா் அண்ணாநகர் பகுதியில் பராமரிப்பு பணி காரணமாக மின் விநியோகம் தடை படும் என அறிவிக்கப்பட்டுள்ளது .கோவில்பட்டி நகர் மேற்கு மின் விநியோக பிரிவிற்குட்பட்ட அறிஞா் அண்ணா நகர் பகுதியில் 11 கிவோ நாலாட்டின்புதூர் உயரழுத்த மின் பாதையில் உள்ள 9.0 மீட்டர் மின் கம்பம் இடம் மாற்றம் செய்யும் பணி நடைபெற உள்ளது.
தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கில் திருமண விழாக்களுக்கு அனுமதி – அரசு அறிவிப்பு!
இதனால் 11 கிவோ நாலாட்டின்புதூா் உயரழுத்த மின் பாதையின் மூலம் மின் விநியோகம் செய்யப்படுகின்ற “கோவில்பட்டி மின்மாற்றி எண்: 25//250 அதிலிருந்து மின் விநியோகம் செய்யப்படுகின்ற அறிஞா் அண்ணா நகா் 4ஆவது தெரு, வீரவாஞ்சி நகா் 1,2,3,4,5 ஆகிய தெரு பகுதிகளில் திங்கள்கிழமை ஜனவரி 10ஆம் தேதி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்பட்டு மின்தடை ஏற்படும் என கோவில்பட்டி கோட்ட மின்வாரிய செயற்பொறியாளர் (பொ) முனியசாமி தெரிவித்துள்ளார்.