சென்னை பல்கலை மாணவர்கள் கவனத்திற்கு – செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைப்பு! அதிகாரபூர்வ அறிவிப்பு!
தமிழகத்தில் கொரோனா தாக்கம் காரணமாக சென்னை பல்கலைக்கழக தேர்வு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டள்ளது. இது குறித்து பின்னர் ஆலோசிக்கப்பட்டு முடிவு எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செமஸ்டர் தேர்வு ஒத்திவைப்பு :
தமிழகத்தில் கொரோனா பரவல் கடந்த இரு வாரங்களுக்கு மேலாக தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தற்போது 2 டோஸ் தடுப்பூசி செலுத்தியவர்களுக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டு வருவது சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. தினசரி பாதிப்பும் நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. இதனை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக அரசு பல்வேறு ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் முன்னெச்சரிக்கை பணிகள் குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை மேற்கொண்டு புதிய கட்டுப்பாடுகளை விதித்தார்.
‘பிக் பாஸ்’ வீட்டில் இருந்து வெளியேறிய தாமரை செல்வியின் முதல் வீடியோ – ரசிகர்கள் நெகிழ்ச்சி!
அதன்படி தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்று கிழமைகளில் முழு ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் மாணவர்களின் உடல் நலன் கருதி மேலும் கல்லூரிகளுக்கு ஜனவரி 20ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் பிற கல்வி நிறுவனங்கள் மற்றும் பயிற்சி மையங்கள் இயங்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. தற்போது பள்ளிகளில் 10,11,12ம் மாணவர்களுக்கு இந்தாண்டு பொதுத்தேர்வு நடத்த திட்டமிடப்பட்டதால் அம்மாணவர்களுக்கும் நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது.
பிப்ரவரி 15 வரை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு – மாநில அரசு உத்தரவு!
கல்லூரி மாணவர்களுக்கு இந்தாண்டு செமஸ்டர் தேர்வுகள் ஆன்லைன் இன்றி நேரடி முறையில் நடைபெற இருந்த நிலையில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்ததால் கல்லூரிகளுக்கும் விடுமுறையும் அளிக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து நடைபெற இருந்த செமஸ்டர் தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மற்ற பல்கலைக்கழகங்களை தொடர்ந்து சென்னை பல்கலையில் ஜனவரி 21 முதல் தொடங்கவிருந்த செமஸ்டர் தேர்வுகள் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மேலும் கொரோனா பரவலை கருத்தில் கொண்டு தேர்வு நடத்துவது குறித்து ஆலோசித்து முடிவு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.