பிக்பாஸ் வீட்டில் 13 போட்டியாளர்களுக்கான விருது வழங்கும் நிகழ்ச்சி – வெளியான ப்ரோமோ!
விஜய் டிவி “பிக்பாஸ் சீசன் 5” தொடங்கப்பட்டு ஆறாவது வாரம் முடிவுக்கு வந்த நிலையில் 13 போட்டியாளர்களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி தற்போது நடைபெறுவது குறித்த ப்ரோமோ வெளியாகி உள்ளது.
பிக்பாஸ் ப்ரோமோ:
விஜய் டிவியில் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி தொடங்கப்பட்டு ஐந்து வாரங்கள் முடிவுக்கு வந்துள்ளது. முதல் வாரத்தில் நமீதா மாரிமுத்து தனிப்பட்ட காரணங்களால் வெளியேறினார். அதன் பின் இரண்டாவது வாரம் நாதியா சங் வெளியேறினார். மூன்றாவது வாரத்தில், அபிஷேக் ராஜா வெளியேறினார். நான்காவது வாரத்தில் சின்ன பொண்ணு வெளியேறினார். ஐந்தாவது வாரத்தில் சுருதி வெளியேறி இருக்கிறார். ஆறாவது வாரத்தில் 7 போட்டியாளர்கள் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர்.
‘செம்பருத்தி’ ஷபானா திருமண விழாவில் ஜீ தமிழ் சீரியல் நடிகைகள் – வைரலாகும் வீடியோ!
அவர்களுக்கு பல கடினமான டாஸ்குகள் வழங்கப்பட்டுள்ளது. அதை 13 போட்டியாளர்களும் போட்டி போட்டுக் கொண்டு செய்து வருகின்றனர். அதன் படி இந்த வார தலைவராக இசைவாணி இருக்கிறார். மேலும் பாவ்னி தன்னுடைய நாணயத்தை கொண்டு ஆதிக்கம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் இன்றைய எபிசோட் குறித்த இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில் 13 போட்டியாளர்களுக்கும் விருது வழங்கும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பிக்பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் வெளியேறும் இமான் அண்ணாச்சி – ரசிகர்கள் குமுறல்!
அதில் ப்ரியங்கா தொகுப்பாளராக இருக்கிறார். சிறந்த போட்டியாளருக்கான விருதை அண்ணாச்சி நிரூப் அவர்களுக்கு கொடுக்கிறார். அதன் பின் சிறப்பாக விளையாடும் போட்டியாளருக்கான விருதை அக்ஷராவிற்கு நிரூப் கொடுக்கிறார். அடுத்து நீ புடுங்குவது எல்லாம் தேவை இல்லாத ஆணி தான் என்ற அவார்ட் ராஜுக்கு இசைவாணி கொடுக்கிறார். உடனே ராஜு இனிமேல் தேவையுள்ள ஆணி புடுங்கப்படும் என தெரிவித்திருக்கிறார்.