பிக்பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் வெளியேறும் இமான் அண்ணாச்சி – ரசிகர்கள் குமுறல்!
பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் வார இறுதியில் மக்களின் ஓட்டுகளின் அடிப்படையில் வெளியேற்றப்படும் போட்டியாளர் யார் என்பதற்கான எதிர்பார்ப்பு அதிக அளவில் இருக்கும். அந்த வகையில் இந்த வாரம் வெளியேறப்போவது யார் என்ற தகவலை போட்டியாளரே உறுதி செய்துள்ளார்.
பிக்பாஸ் சீசன் 5:
பிக் பாஸ் நிகழ்ச்சி முழுக்க முழுக்க ஸ்கிரிப்ட் படி நடக்கிறது என்று மக்கள் ஒரு புறம் புகார்களை எழுப்பி வந்தாலும், மற்றொரு புறம் அப்படி எல்லாம் இல்லை என்று ஒரு தரப்பினர் கூறி வருகின்றனர். இந்நிகழ்ச்சியின் முதல் சீசனில் ஆரம்பித்த இந்த புகார்கள் 5 சீசன்களாக ஒளிபரப்பாகியும் இன்னும் ஓயவில்லை. மேலும், இந்த சீசனில் யார் யார் எப்போது வெளியேறப் போகிறார்கள் என்ற பட்டியல் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகியது. இதனால் பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்த சர்ச்சைகள் அதிகரிக்க தொடங்கியது.
‘பாரதி கண்ணம்மா’ வில்லி வெண்பா பரீனாவிற்கு பிரசவம் – குவியும் வாழ்த்துக்கள்!
கடந்த சில வாரங்களாக போட்டியாளர் அபிநய், மற்ற போட்டியாளர்கள் மட்டும் பார்வையாளர்களின் அதிருப்தியை சம்பாதித்து வருகிறார். ஆனால் இவர் ஜெமினி கணேசன், சாவித்திரியின் பேரன் என்பதால் கமலின் நேரடி சிபாரிசில் தான் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் என்றும், இதனாலேயே இவர் போட்டியில் இருந்து வெளியேற்றப்படாமல் உள்ளார் என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளது. இணையவாசிகள் அபிஷேக் ராஜா முதல் சுருதி வரை அனைவரையும் திட்டமிட்டு தான் வெளியேற்றி உள்ளனர் என்று கூறி வருகின்றனர்.
‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய நமீதா மாரிமுத்து செய்யும் காரியம் – வைரலாகும் வீடியோ!
சுருதி வாக்குகளை குறைவாக பெற்றுள்ள போதிலும், அவரிடம் பஞ்சபூத நாணயம் இருந்தது. அதனை பற்றி ஒன்றும் தெரிவிக்கவில்லை. குறிப்பாக கடந்த வாரம் சுருதி தான் தான் வெளியேற போவதாக கூறியிருந்தார். அதேபோல், இந்த வாரம் பொம்மை டாஸ்க் நடக்கும் போது, இமான் அண்ணாச்சி இந்த வாரம் நான் தான் வெளியில் போறேன், பை என்று கூறியிருந்தார். மேலும் இமான் அண்ணாச்சி வெறும் 40 நாள் கால்ஷீட்டில் மட்டுமே நிகழ்ச்சில் கலந்து கொண்டதாகவும் அதனால் இந்த வாரம் கண்டிப்பாக இமான் அண்ணாச்சி தான் வெளியேற போவதாகவும் தெரிகிறது. இதை அவரே ஒத்துக்கொண்டதால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.