TNPSC குரூப் 4 VAO போட்டித்தேர்வு ரத்து? உயர் நீதிமன்றம் சரமாரி கேள்வி! தீர்ப்பு ஒத்திவைப்பு!
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்பட்ட தேர்வுகளில் நடந்த முறைகேடு தொடர்பாக தொடரப்பட்ட வழக்கு நேற்று மீண்டும் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் விசாரணைக்கு வந்தது. இந்நிலையில் தேர்வில் முறைகேடு உறுதி செய்த பிறகும் தேர்வை ரத்து செய்யாதது ஏன்? என்று நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
TNPSC முறைகேடு:
தமிழகத்தில் பல்வேறு அரசு துறைகளுக்கு பணியாளர்கள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் தேர்வுகள் நடத்தப்பட்டு அதன் மூலம் தெரிவு செய்யப்படுகின்றனர். அந்த வகையில் VAO மற்றும் குரூப் – 1 முதல் 5 வரை பல்வேறு பணிகளுக்கு தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதில் VAO மற்றும் குரூப் – 4 தேர்வுகள் 10ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் எழுத்துத்தேர்வு அடிப்படையில் மட்டுமே பணி நியமனம் செய்யப்பட்டு வருகிறது. அதனால் இந்த தேர்வை பெரும்பாலானோர் எழுதி வருகின்றனர்.
நவ.17 முதல் 4 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள் அடைப்பு – மாவட்ட ஆட்சியர் உத்தரவு!
அவ்வாறு நடத்தப்படும் தேர்வுகளில் பல்வேறு முறைகேடுகள் நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளன. அந்த வகையில் கடந்த 2019 ஆம் வருடம் நடத்தப்பட்ட VAO மற்றும் குரூப் – 4 தேர்வுகளில் முறைகேடுகள் நடந்துள்ளது. அதாவது இராமேஸ்வரம் மற்றும் கீழக்கரை தேர்வு மையங்களில் முறைகேடு நடந்துள்ளது. அதில் இராமேஸ்வரம் தேர்வு மையத்தில் தேர்வு எழுதிய தேர்வர்கள் 60 பேர் முதல் 100 இடங்களுக்குள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த முறைகேடு குறித்து சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது.
அதனை தொடர்ந்து இந்த வழக்கு செவ்வாய்க் கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது கடந்த 2016 முதல் 2019 வரை நடத்தப்பட்ட குரூப் 2, 4 மற்றும் VAO தேர்வுகளில் முறைகேடு செய்ததில் 194 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக சிபிஐ அறிக்கை சமர்ப்பித்துள்ளது. அதனை தொடர்ந்து விசாரித்த நீதிபதிகள் முறைகேடு நடந்த இராமேஸ்வரம் மற்றும் கீழக்கரை தேர்வு மையங்களில் தேர்வு ரத்து செய்யப்பட்டதா? என்று கேள்வி எழுப்பியுள்ளனர். அரசு தரப்பில் இல்லை என்று பதில் அளிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து நீதிபதிகள் தேர்தல் வாக்குச் சாவடியில் முறைகேடு நிகழ்ந்தால், அந்த வாக்குச்சாவடிக்கு மீண்டும் மறு வாக்குப்பதிவு நடத்தப்படும். இந்நிலையில் முறைகேடு நடந்தது உறுதி செய்யப்பட்ட பிறகும் அந்த தேர்வு மையங்களில் தேர்வை ரத்து செய்யாதது ஏன்? என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர். மேலும் நீதிபதிகள் இது மிகப்பெரும் மோசடி என்பதால் TNPSC மீது மக்கள் இழந்த நம்பிக்கையை கொண்டுவரும் விதமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி வழக்கின் தீர்ப்பினை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்துள்ளனர்.