நவம்பர் 22 முதல் பள்ளிகள் மீண்டும் திறப்பு – தீபாவளி விடுமுறை நீட்டிப்பு! மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு!

0
நவம்பர் 22 முதல் பள்ளிகள் மீண்டும் திறப்பு - தீபாவளி விடுமுறை நீட்டிப்பு! மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு!
நவம்பர் 22 முதல் பள்ளிகள் மீண்டும் திறப்பு - தீபாவளி விடுமுறை நீட்டிப்பு! மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு!
நவம்பர் 22 முதல் பள்ளிகள் மீண்டும் திறப்பு – தீபாவளி விடுமுறை நீட்டிப்பு! மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு!

மஹாராஷ்டிராவின் மும்பை மாநகரில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் மாணவர்களுக்கு தீபாவளி விடுமுறை நீட்டிக்கப்படுவதாகவும், நவம்பர் 22 முதல் பள்ளிகள் மீண்டுமாக திறக்கப்படும் என்றும் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

பள்ளிகள் திறப்பு

சமீபத்தில் மாணவர்களின் கற்றல் சாதனைகள் குறித்த நாடு தழுவிய கணக்கெடுப்பில் பங்கேற்காத மும்பை மாநகரத்தில் உள்ள பள்ளிகள் நவம்பர் 22ம் தேதி வரை தீபாவளி விடுமுறையை தொடரலாம் என கல்வித்துறை வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், தேசிய சாதனை ஆய்வு (NAS) 2021க்கு தேர்ந்தெடுக்கப்பட்ட மும்பையில் உள்ள சுமார் 292 பள்ளிகள் இன்று (நவ.11) முதல் மீண்டும் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Reliance Jio வழங்கும் குறைந்த விலை ரீசார்ஜ் திட்டங்கள் – தினமும் 1.5 ஜிபி டேட்டா!

இருப்பினும், மாநிலம் முழுவதும் பள்ளிகளை மீண்டும் திறப்பதில் தொடர்ந்து குழப்ப நிலை நீடித்துள்ளது. இப்போது, நவம்பர் 3 தேதி வெளியிடப்பட்ட சுற்றறிக்கையில், நிலுவையில் உள்ள தீபாவளி விடுமுறையை கிறிஸ்துமஸ் அல்லது கோடை விடுமுறையுடன் மாற்றியமைக்க அரசு பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது. இந்நிலையில் கணக்கெடுப்பில் பங்கேற்காத பள்ளிகளை மீண்டும் திறப்பதில் அர்த்தமில்லை என்று தீபாவளி விடுமுறைக்காக போராடும் மகாராஷ்டிரா ராஜ்ய ஷிக்ஷன் சமிதியின் செயலாளர் சிவநாத் தரடே கூறியுள்ளார்.

அதனால் கணக்கெடுப்பில் ஈடுபடுத்தப்படும் பள்ளிகள் 100% வருகையை உறுதி செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், மஹாராஷ்டிராவின் பள்ளிகள் கிராமப்புறங்களில் 5 முதல் 12 ஆம் வகுப்புகளுக்கும், நகர்ப்புறங்களில் 8 முதல் 12 ஆம் வகுப்புகளுக்கும் பெற்றோரின் ஒப்புதலுடன் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. இப்போது கணக்கெடுப்புக்கு, பெற்றோர்கள் வியாழன் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் கட்டாயம் பள்ளியில் இருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

அதனால் ஆய்வுக்காக பள்ளிக்கு வரும் மாணவர்கள் அனைவரும் வெள்ளிக்கிழமை காலை 8 மணி முதல் மாலை 3 மணி வரை பள்ளியில் இருக்க வேண்டும் என்றும் உணவு மற்றும் தண்ணீரை உடன் எடுத்துச் செல்ல வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆய்வுக்காக மாணவர்கள் ரயிலில் பயணம் செய்ய அரசு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் மாணவருடன் வரும் நபர் முழுமையாக தடுப்பூசி போட வேண்டியதில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசு ஓய்வூதியதாரர்களின் 72 மாத அகவிலைப்படி நிலுவை – முக்கிய கோரிக்கை!

இப்போது தேர்ந்தெடுக்கப்பட்ட பள்ளிகள் ஒரு தரத்திற்கு 30 மாணவர்களை கணக்கெடுக்க வேண்டும். உதாரணமாக, 5 மற்றும் 10 ஆம் வகுப்புகளை ஆய்வு செய்ய தேர்ந்தெடுக்கப்பட்ட பள்ளிகள் அனைத்து மாணவர்களையும் அழைக்க வேண்டும். இதற்கிடையில் மஹாராஷ்டிரா மாநில பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் வர்ஷா கெய்க்வாட் பள்ளிகள் மற்றும் பெற்றோர்கள் கணக்கெடுப்பில் பங்கேற்று ஒட்டுமொத்த தரவரிசையில் மகாராஷ்டிராவை முதலிடத்தில் வைத்திருக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!