விஜய் டிவி பிக் பாஸ் போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்ட பிரியங்கா – ரசிகர்கள் ஷாக்!
விஜய் டிவி “பிக்பாஸ் சீசன் 5” நிகழ்ச்சியின் ஆறாவது வாரத்திற்கான முதல் ப்ரோமோ வெளியாகி உள்ளது. அந்த போட்டியில் இருந்து பிரியங்கா வெளியேற்றப்பட்டதாக பிக்பாஸ் அறிவித்துள்ளார். இதனால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.
பிக்பாஸ் ப்ரோமோ:
பிக்பாஸ் நிகழ்ச்சி இந்த ஆண்டு பிரம்மாண்டமாக தொடங்கப்பட்டு தற்போது ஐந்து வாரங்கள் முடிந்து வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது. இந்த வாரத்தின் தலைவராக முதலில் அபிநய் தேர்வு செய்யப்பட்டார். அதன் பின் இசைவாணி தனது நாணயத்தை பயன்படுத்தி வீட்டின் தலைவராக பொறுப்பேற்றார். பின் ஆகாயம் நாணயம் வைத்திருக்கும் பாவ்னி இந்த வார சர்வாதிகாரியாக மாறினார். மேலும் 7 போட்டியாளர்கள் நாமினேஷனில் இருக்கின்றனர்.
தல தீபாவளி கொண்டாடிய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” ஐஸ்வர்யா – குவியும் லைக்குகள்!
அதில் வருண், அக்ஷரா, மதுமிதா, சிபி, ராஜு, பிரியங்கா, நிரூப் ஆகியோர் இருக்கின்றனர். நாமினேஷனில் இல்லாத மற்ற போட்டியாளர்கள் நாமினேட் செய்யப்பட்டவர்களில் யாரவது ஒருவரை காப்பாற்ற வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதன் படி நாமினேட் செய்யப்பட்டவர்கள் பெயர்கள் கொண்ட பொம்மைகள் வைக்கப்பட்டுள்ளது. அதை எடுத்துக் கொண்டு போட்டியாளர்கள் ஓட கடைசியாக வந்தவர் வைத்திருக்கும் பொம்மையில் உள்ள போட்டியாளர் போட்டியில் இருந்து நீக்கப்பட்டுவார்.
சரஸ்வதிக்காக சந்திரகலாவை பழிவாங்கும் கோதை – “தமிழும் சரஸ்வதியும்” ப்ரோமோ! ரசிகர்கள் குஷி!
அதன்படி பிரியங்கா போட்டியில் இருந்து நீக்கப்பட்டார். அதற்கு காரணம் நிரூப் தாமரையை வேண்டும் என்றே தடுத்தது தான். நேற்றைய எபிசோடில் பிரியங்கா தான் சொல்வது தான் சரி என பேசுவதாக நிரூப் சொல்ல, உன்னை பற்றி நீ பேசு என பிரியங்கா கடுப்பாகிறார். தொடர்ந்து நிரூப் பலரிடம் சண்டை போட்டு வருகிறார். தற்போது ஐந்து வாரங்களில் இல்லாத நிரூப் தற்போது பார்க்க முடிகிறது. இது தான் அவரது உண்மையான முகமா என சந்தேகம் ரசிகர்களிடம் எழுந்துள்ளது.