1 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு நவ.15 பள்ளிகள் திறப்பு – மாநில அரசு அறிவிப்பு!
கொரோனா பாதிப்பு எண்ணிக்கை குறைந்துள்ளதை அடுத்து, ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு நவம்பர் 15 முதல் நேரடி வகுப்புகள் தொடங்கப்படும் என்று மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. இதனுடன் மேலும் சில தளர்வுகளையும் அளித்துள்ளது.
கல்வி நிலையங்கள் திறப்பு:
ராஜஸ்தான் மாநிலத்தில் கொரோனா தொற்று பாதிப்பு நிலைமை முன்னேற்றம் அடைந்துள்ளது. மாநிலத்தில் கோவிட் – 19 காரணமாக இறப்பு விகிதம் 0.94% ஆகும். நவம்பர் 8ம் தேதியான நேற்றைய நிலவரப்படி, தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வருபவர்களின் எண்ணிக்கையும் குறைந்துள்ளது. தற்போது ராஜஸ்தானில் மொத்தம் 42 பேர் மட்டுமே கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வருகின்றனர். இதனால் மாநில அரசு கொரோனா தொற்று பாதுகாப்பின் புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.
அடுத்த 2 நாட்களுக்கு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை – அமைச்சர் அறிவிப்பு!
ராஜஸ்தான் அரசு வழங்கிய வழிகாட்டுதல்களின் படி, மாணவர்கள் பள்ளிக்குச் செல்ல பெற்றோரின் ஒப்புதல் அவசியம். நேரடி வகுப்புகள் தொடர்பான, முகக்கவசம் அணிவது, தகுந்த சமூக இடைவெளியை கடைபிடிப்பது மற்றும் இது போன்ற COVID-19 வழிகாட்டுதல்களுடன் கல்வி நிறுவனங்கள் மீண்டும் திறக்கப்பட வேண்டும் என்று உள்துறை முதன்மை செயலாளர் அபய் குமார் அறிவித்துள்ளார். அந்த அறிக்கையின் படி அனைத்து அரசு, தனியார் பள்ளிகள் 1 முதல் 12ம் வகுப்பு வரையிலான வகுப்புகளை மற்றும் தனியார், அரசு பல்கலைக்கழகங்களில் வகுப்புகளை நவம்பர் 15 ஆம் தேதி முதல் 100 சதவீத திறனுடன் தொடங்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் கவனத்திற்கு – நவ.12ம் தேதி பேச்சுப்போட்டி!
அனைத்து பயிற்சி நிறுவனங்களிலும் ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத ஊழியர்கள் அனைவரும் நேரடியாக வர அனுமதியளிக்கப்பட்டுள்ளது. இதனுடன் திருமண விழாக்களில் கலந்து கொள்பவர்களுக்கான எண்ணிக்கை தொடர்பான கட்டுப்பாடுகளையும் அரசு நீக்கியுள்ளது. கலாச்சாரம், மதம், விளையாட்டு, பொழுதுபோக்கு மற்றும் பிற வழிகாட்டுதல்கள் பொது இடங்களில் அனுமதிக்கப்படும். இது தவிர கொரோனா தடுப்பு நடைமுறைகள் அனைத்தும் ராஜஸ்தான் முழுவதும் கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்றும் அரசு உத்தரவிட்டுள்ளது.