தமிழகத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் கவனத்திற்கு – நவ.12ம் தேதி பேச்சுப்போட்டி!

0
தமிழகத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் கவனத்திற்கு - நவ.12ம் தேதி பேச்சுப்போட்டி!
தமிழகத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் கவனத்திற்கு - நவ.12ம் தேதி பேச்சுப்போட்டி!
தமிழகத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் கவனத்திற்கு – நவ.12ம் தேதி பேச்சுப்போட்டி!

தமிழகத்தில் வரும் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு நவ.12ம் தேதி பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு போட்டிகள் நடத்த கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. மேலும் வெற்றி பெறும் மாணவர்களுக்கு ரூ.5 ஆயிரம் பரிசுத்தொகை வழங்கப்படும்.

பேச்சுப்போட்டி:

தமிழகத்தில் தற்போது கொரோனா பரவல் குறைந்து வருவதை தொடர்ந்து பள்ளிகள் அனைத்தும் செயல்பட தொடங்கியுள்ளன. அந்த வகையில் கடந்த செப்.1ம் தேதி 9 முதல் 12ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதனை தொடர்ந்து தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளும் 19 மாதங்களுக்கு பிறகு கடந்த நவ.1ம் தேதி திறக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் முன்னாள் பாரத பிரதமர் பண்டித ஜவஹர்லால் நேரு அவர்களது பிறந்த நாளான நவ.14ம் தேதியை குழந்தைகள் தினமாக கொண்டாடி வருகிறோம். கடந்த ஆண்டு கொரோனா தொற்று காரணத்தால் குழந்தைகள் தினம் கொண்டாட முடியவில்லை. தற்போது அந்த நிலை மாறி பள்ளிகள் செயல்பட்டு வருவதால் இந்த ஆண்டு குழந்தைகள் தினத்தை கொண்டாட பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது.

Post Office புதிய சேமிப்பு திட்டம் – தினமும் 34 ரூபாய் சேமித்தால் 5.32 லட்சம் வரை பெறலாம்!

அதனால் பேச்சுப்போட்டிகள் நடத்தி அவர்களது மன நிலையை கொஞ்சம் மாற்றும் விதமாக முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் வரும் நவ.12ம் தேதி இந்த போட்டி கிருஷ்ணகிரி மாவட்ட அரசு ஆடவர் கலைக் கல்லூரியில் நடைபெற உள்ளது. போட்டிகள் பள்ளி மாணவர்களுக்கு காலை 10 மணியளவிலும், கல்லூரி மாணவர்களுக்கு பிற்பகல் 2 மணியளவில் நடைபெற உள்ளது. பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு பேச்சுப்போட்டிகள் முதற்கண் கீழ்நிலை அளவில் முதன்மை கல்வி அலுவலர் மற்றும் கல்லூரி துணை கல்வி இயக்குனரால் நடத்தப்பட்டு தேர்வு செய்யப்படுபவார்கள்.

தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு இடி,மின்னலுடன் கூடிய கனமழை – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

அவ்வாறு தேர்வு செய்யப்பட்டவர்கள் மட்டுமே மாவட்ட அளவிலான பேச்சுப்போட்டியில் கலந்து கொள்ள முடியும். போட்டியில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு 1-ம் பரிசு ரூ. 5000, 2-ம் பரிசு ரூ.3000, 3-ம் பரிசு ரூ.2000 வழங்கப்படும். மேலும் பங்கேற்கும் மாணவர்களில் சிறந்த முறையில் திறமையை வெளிப்படுத்தும் அரசுப் பள்ளி மாணவர்களில் 2 பேர் தேர்வு செய்யப்பட்டு ஒவ்வொருவருக்கும் ரூ.2000 வழங்கப்படும். எனவே கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு மாவட்ட கலெக்டர் ஜெயச்சந்திர பானு ரெட்டி தெரிவித்துள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!