அடுத்த 2 நாட்களுக்கு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை – அமைச்சர் அறிவிப்பு!
தமிழகத்தின் அண்டை யூனியன் பிரதேசமான புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் கனமழை பெய்து வருவதன் காரணமாக அடுத்து வரும் 2 நாட்களுக்கு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து அமைச்சர் நமச்சிவாயம் உத்தரவிட்டுள்ளார்.
விடுமுறை அறிவிப்பு
தற்போது துவங்கி இருக்கும் வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் ஆகிய பகுதிகளில் வரலாறு காணாத அளவுக்கு மழை பெய்து வருகிறது. குறிப்பாக தமிழகத்தின் வடக்கு பகுதியான சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்கள் இந்த கனமழையால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில் பல்வேறு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் கவனத்திற்கு – நவ.12ம் தேதி பேச்சுப்போட்டி!
இதற்கிடையில் தமிழகத்தின் தென் கிழக்கு வங்கக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி இருக்கும் நிலையில், அடுத்த 32 மணி நேரத்திற்குள் அது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது. அதனால் இந்த கனமழை வரும் நவ.11ம் தேதி வரை காணப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Post Office புதிய சேமிப்பு திட்டம் – தினமும் 34 ரூபாய் சேமித்தால் 5.32 லட்சம் வரை பெறலாம்!
இந்நிலையில் கடந்த 2 நாட்களாக புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள பள்ளிகளுக்கு அளிக்கப்பட்டிருந்த விடுமுறை இன்னும் 2 நாட்களுக்கு நீட்டிக்கப்படும் என அமைச்சர் நமச்சிவாயம் அறிவித்துள்ளார். அந்த வகையில் கனமழை காரணமாக புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் நாளை மற்றும் நாளை மறுநாள் (நவ.10,11) என அடுத்த 2 நாட்களுக்கு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து உத்தரவிடப்பட்டுள்ளது.