சரஸ்வதிக்காக சந்திரகலாவை பழிவாங்கும் கோதை – “தமிழும் சரஸ்வதியும்” ப்ரோமோ! ரசிகர்கள் குஷி!
விஜய் டிவி “தமிழும் சரஸ்வதியும்” சீரியலில், சரஸ்வதியை மாட்டிவிட சந்திரலேகா திட்டமிட அதை தமிழ் கண்டுபிடித்து கோதையிடம் சொல்கிறார். கோதை சந்திரலேகாவை திருந்த புதிதாக திட்டமிடுகிறார். இது குறித்த ப்ரோமோ ஒன்று வெளியாகி உள்ளது.
தமிழும் சரஸ்வதியும்:
தமிழும் சரஸ்வதியும் சீரியலில் கார்த்திக்கும், வசுவிற்கும் திருமணம் நடைபெற இருக்கிறது. அதில் சரஸ்வதி கலந்து கொள்கிறார். சந்திரகலாவிற்கு ஆரம்பத்தில் இருந்தே சரஸ்வதியை பிடிக்கவில்லை போதாதற்கு சந்திரகலா புடவை மீது சரஸ்வதி காபியை கொட்டி விடுகிறார். அதனால் கோவமாக இருக்கும் சந்திரகலா சரஸ்வதியை பழி வாங்க நினைக்கிறார். அவர் வசுவின் நகையை சரஸ்வதி திருடியது போல திட்டமிடுகிறார். ஏதோ தப்பாக இருப்பதை உணர்ந்த தமிழ் தனது நண்பருடன் சேர்ந்து நாடகம் ஆடுகிறார்.
‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் இருந்து விலகிய ஐஸ்வர்யா செய்த காரியம் – ரசிகர்கள் ஷாக்!
உடனே வேலைக்காரியை மிரட்டி உண்மையை தெரிந்து கொண்ட தமிழ் கோதையை அழைத்து உண்மையை சொல்கிறார். பின் கோதை உங்களது பாரம்பரியம் எதுவோ அது போல நடந்து கொள்ளுங்கள் என சொல்ல, சந்திரலேகா எதுவும் பேசாமல் இருக்கிறார். இந்நிலையில் அடுத்து வரும் திருப்பங்கள் குறித்த புதிய ப்ரோமோ ஒன்று வெளியாகி உள்ளது. அதில் கோதை சந்திரலேகாவை பழி வாங்க நினைக்கிறார். அதற்கான புதிதாக ஒன்றை செய்கிறார்.
‘தமிழும் சரஸ்வதியும்’ நட்சத்திராவுடன் இணைந்த ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ கதிர் – வைரலாகும் பதிவு!
அதில் அவரது பேக்டரியில் வேலை செய்யும் தொழிலாளர்களை அழைத்து அமர வைக்கிறார். அவர்களிடம் சந்திரகலா அவர்களது அன்பை வெளிப்படுத்தும் படி உங்க எல்லாருக்கும் சாப்பாடு பரிமாறுவாங்க என கோதை சொல்கிறார். நேற்று சரஸ்வதியிடம் அப்படி நடந்து கொண்டதற்கு பரிகாரம் என கோதை சொல்ல என்ன சொல்வது என தெரியாமல் சந்திரலேகா சாப்பாடு பரிமாறுகிறார். இந்த ப்ரோமோ பார்த்த ரசிகர்கள் கோதையின் நடவடிக்கையை பாராட்டி வருகின்றனர்.