குழந்தையின் உயிரை காப்பாற்றியதால் கண்ணம்மா மீது பாசம் காட்டும் பாரதி – ப்ரோமோ ரிலீஸ்!
விஜய் டிவி சீரியலில் கண்ணம்மாவால் மட்டுமே தற்போது அந்த குழந்தை உயிர் பிழைத்துள்ளது. இதனால் கண்ணம்மா மீது பாரதிக்கு ஒரு நல்ல எண்ணம் தோன்றுகிறது. தற்போது கண் முழித்ததும் இந்த குழந்தை கண்ணம்மாவிற்கும் பாரதிக்கும் நன்றி கூறும்படியான ப்ரோமோ வெளியாகியுள்ளது.
பாரதி கண்ணம்மா:
விஜய் தொலைக்காட்சியில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாரதி கண்ணம்மா தொடரில் கண்ணம்மா, பாரதியால் மட்டுமே ஒரு குழந்தை தற்போது உயிரோடு இருக்கிறது. அதாவது மூளைச்சாவு அடைந்த குழந்தையின் இதயத்தை விழுப்புரத்தில் இருந்து சென்னைக்கு ஹெலிகாப்டரில் கொண்டு செல்ல பிளான் முதலில் செய்திருந்தனர். ஆனால், எதிர்பாராத விதமாக மழை பெய்ததால் ஹெலிகாப்டரின் உதவியோடு குழந்தைக்கு இதயத்தை கொண்டு செல்ல முடியாத சூழல் ஏற்பட்டு விட்டது. இதனால் குழந்தை உயிர் பிழைக்குமா என அனைவரும் பதட்டத்தில் இருந்தனர்.
Exams Daily Mobile App Download
ஒன்றரை மணி நேரத்திற்குள் குழந்தைக்கு இதயத்தை அனுப்பி வைத்தால் மட்டுமே குழந்தையால் உயிர் பிழைக்க முடியும். கண்டிப்பாக குழந்தையின் உயிரை காப்பாற்றவே முடியாது என மருத்துவர்கள் நினைத்துவிட்டனர். குழந்தையின் பெற்றோருமே இனி குழந்தையை காப்பாற்ற முடியாது என்கிற மன நிலைமைக்கு வந்துவிட்டனர். இந்த சமயத்தில் கண்ணம்மா ஒரு பிளான் செய்து சரியான நேரத்தில் இதயத்தை மருத்துவமனைக்கு அனுப்பி வந்து குழ்நதையின் உயிரை காப்பாற்றியுள்ளார். கண்ணம்மாவால் தான் குழந்தை உயிர் பிழைத்தது என பாரதி பெருமையாக கூறுகிறார்.
குண்டு வெடிப்பில் பார்வதி இறந்துவிடுவதாக கூறும் போலீசார் – அதிர்ச்சியில் குடும்பத்தினர்!
தற்போது தான் அந்த குழந்தை கண் முழிக்கிறது. கண் முழித்ததுமே கண்ணம்மாவை தான் அந்த குழந்தை தேடுகிறது. கண்ணம்மா, பாரதியையும் பார்த்து உங்களால் தான் நான் உயிரோடு இருக்கிறேன். உங்கள் இருவருக்கும் நன்றி என கூறுகிறது. மேலும், மூளைச்சாவு அடைந்த குழந்தையின் அம்மாவும் அப்பாவும் இந்த குழந்தையை பார்க்க வருகிறார்கள். இனிமேல் இவர்களும் உனக்கு அம்மா அப்பா தான் என குழந்தையிடம் கூறுகிறார். உடனே குழந்தை அவர்களை அம்மா அப்பா என கூப்பிடும் படியான ப்ரோமோ வெளியாகியுள்ளது.