BEL நிறுவனத்தில் ரூ. 50,000/-ஊதியத்தில் வேலை – விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு!
Project Engineer-I மற்றும் Sr. Assistant. Engineer (E-I) பணிக்கென காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பு ஒன்றை பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் ஆனது சமீபத்தில் வெளியிட்டது. அரசு அல்லது அரசு அங்கீகார பெற்ற பல்கலைக்கழகத்தில் Electronics/ Electronics & Communication, Electronics & Telecommunication/ Telecommunication /Communication ஆகிய துறைகளில் இருந்து BE / B. Tech தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையவும்.
வேலைவாய்ப்பு விவரங்கள்:
- Project Engineer-I மற்றும் Sr. Assistant. Engineer (E-I) பணிக்கென காலியாக உள்ள 6 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் B.E/B.Tech தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
தமிழகத்தில் ஜூன் 8ம் தேதி இந்த ஏரியால கரண்ட் இருக்காது – முழு விவரம் உள்ளே!
- பணியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 32 மற்றும் 50 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
- தேர்வாகும் தகுதியானவர்களுக்கு முதலாம் ஆண்டு ரூ. 40,000/- முதல் 3ம் ஆண்டு ரூ. 50,000/- வரை ஊதியமாக வழங்கப்படும்.
- விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு / நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 08.06.2023ம் தேதிக்குள் அதிகாரப்பூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது. தற்போது அதற்கான கால அவகாசம் நாளையுடன் முடியவுள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.