தமிழக தனியார் பேருந்துகளில் பள்ளி மாணவர்களுக்கு ரூ.5 டிக்கெட் – குவியும் பாராட்டுக்கள்!
தமிழகத்தில் ஜூன் 12 முதல் பள்ளிகள் திறக்கப்பட இருக்கும் நிலையில், கோவை மாவட்டத்தில் தனியார் பேருந்தில் மாணவர்களுக்கு ரூ. 5 மட்டுமே டிக்கெட் என அறிவித்துள்ளது.
பேருந்து கட்டணம்
தமிழகத்தில் வெயில் தாக்கம் அதிகமாக இருக்கும் நிலையில், அனைத்து பள்ளிகளும் ஜூன் 12 ஆம் தேதி முதல் திறக்கப்பட இருக்கிறது. இந்நிலையில் பள்ளி மாணவர்கள் பயணம் செய்வதற்கு வசதியாக அரசு பேருந்துகளில் சீருடை வரும் மாணவ மாணவிகள் இலவசமாக பயணம் செய்யலாம் என அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்நிலையில் கோவை மாவட்டத்தில் தனியார் பேருந்து நிறுவனம் ஒன்று சலுகை ஒன்றை வழங்கி இருக்கிறது.
ரேஷன் கடை டீலர்களின் வேலைநிறுத்த போராட்டம் நிறைவு – முக்கிய அறிவிப்பு வெளியீடு!
அதாவது, கோவை மாவட்டத்தில் தனியார் பேருந்து நிறுவனம் சார்பில் இயங்கி வரும் 4 பேருந்துகளிலும் பள்ளி மாணவ மாணவிகள் சீருடை உடன் வந்தால், அவர்களுக்கு ரூ. 5 மட்டுமே கட்டணம் வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தனியார் பேருந்து நிறுவனத்தின் இந்த அறிவிப்பு பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.