ஹேமாவை வெறுக்கும் லட்சுமி, காரணம் தெரியாமல் குழப்பத்தில் கண்ணம்மா – இன்றைய எபிசோடு!
விஜய் டிவி ‘பாரதி கண்ணம்மா’ சீரியலின் இன்றைய எபிசோடில் ஹேமா கூறியதை நினைத்து கோபப்படும் லட்சுமி அவரைப் பற்றி பேச வேண்டாம் எனவும், அவரை வெறுப்பதாகவும் கண்ணம்மாவிடம் கூறுகிறார். இதற்கு என்ன காரணம் என்று தெரியாமல் கண்ணம்மா குழம்பி போயிருக்கிறார்.
பாரதி கண்ணம்மா
இதுவரை ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் கதைக்களத்தில் பாரதிக்கும் கண்ணம்மாவுக்கும் திருமணம் செய்து வைக்க திட்டமிடும் ஹேமா இது பற்றி லட்சுமியிடம் கேட்கும் போது இருவருக்கும் இடையே சண்டை உருவாகிறது. இப்போது, மதிய இடைவேளையில் பாரதி, கண்ணம்மா இருவரும் குழந்தைகளுக்கு சாப்பாடு கொண்டு வரும் போது லட்சுமி, ஹேமா இருவரும் தனித்தனியாக முறைத்தபடியே உட்கார்ந்திருக்கிறார்கள். இவர்கள் இருவரிடமும் என்ன சண்டை என்று பாரதியும், கண்ணம்மாவும் கேட்க அவர்கள் பதில் சொல்லுவது போல தெரியவில்லை. பிறகு லட்சுமி அவள் அப்பாவை கேட்டு ஏன் என்னிடம் வந்தாள். நீ தான் அனுப்பி விட்டியா என்று கண்ணம்மாவிடம் கோபப்படுகிறார் பாரதி.
விஜய் டிவியில் கண்ணம்மாவாக அறிமுகமான ரோஷினி வெளியிட்ட வீடியோ – ரசிகர்கள் வாழ்த்து!
தொடர்ந்து அஞ்சலியின் குழந்தைக்காக அவரது அப்பா புது துணி எடுத்து வந்து கொடுக்கிறார். அப்போது, பாரதிக்கும் கண்ணம்மாவுக்கும் திருமணம் செய்து வைக்க வேண்டும் என ஹேமா சொன்னதை அவரிடம் கூறி சந்தோஷப்படுகிறார் அகிலன். பிறகு லட்சுமி பேசியதை நினைத்து வருத்தப்பட்டு கொண்டிருக்கும் ஹேமாவிடம் எதற்காக இப்படி இருக்கிறாய் அதற்கு என்ன காரணம் என்று வீட்டில் எல்லாரும் கேட்கின்றனர். அப்போது, பள்ளிக்கூடத்தில் எல்லா பாடங்களிலும் ஃபெயில் ஆகிவிட்டதாக கூறி சமாளிக்கிறார் ஹேமா. இதை ஏற்றுக்கொள்ளாத சௌந்தர்யா, ஒருவேளை ஹேமா, கண்ணம்மாவிடம் சென்று பாரதியை திருமணம் செய்து கொள்ள சொல்லி கேட்டிருப்பாளோ என்று வேணுவிடம் புலம்புகிறார்.
சன் டிவி ‘கயல்’ சீரியல் நடிகை சைத்ரா ரெட்டி நடுரோட்டில் செய்த சம்பவம் – வைரலாகும் வீடியோ!
மறுபக்கத்தில், லட்சுமிக்கும் ஹேமாவுக்கும் என்ன பிரச்சனை என்று கண்ணம்மா கேட்க ஹேமாவை எனக்கு பிடிக்கவில்லை. அவள் ஒரு முட்டாள். அவள் டாக்டர் அங்கிளுக்கு தான் மகள். முதலில் நீ அவளுக்கு சாப்பாடு கொண்டு வருவது, ஊட்டி விடுவது எல்லாவற்றையும் நிறுத்து. அவளை பற்றி நீ திரும்ப திரும்ப பேசாத என்று லட்சுமி காட்டமாக பதில் சொல்கிறார். தொடர்ந்து நாம் இவ்வளவு நாள் தனியாக தானே இருந்தோம். இனிமேலும் இப்படியே இருப்போம். நமக்கு பாட்டி, தாத்தா, அகிலன் அங்கிள் என யாரும் வேண்டாம் என கூறும் லட்சுமி, ஹேமா கூறியதை நினைத்து வருத்தப்படுவது போல இன்றைய எபிசோடு வெளியாகி இருக்கிறது.