ஹேமாவை அழைத்து செல்ல பிடிவாதம் பிடிக்கும் கண்ணம்மா, கெஞ்சி கேட்கும் சௌந்தர்யா – இன்றைய “பாரதி கண்ணம்மா” எபிசோட்!
விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில், ஹேமாவை பார்க்க வரும் கண்ணம்மா நான் தான் உன்னுடைய அம்மா என சொல்ல வருகிறார். பின் சௌந்தர்யா குடும்பத்தினரிடம் என் குழந்தையை ஏன் பிரிச்சிங்க என கேள்வி கேட்கிறார்.
பாரதி கண்ணம்மா:
இன்று “பாரதி கண்ணம்மா” சீரியலில், ஹேமாவை கண்ணம்மா பார்க்க வருகிறார். பின் ஹேமாவை கட்டி அணைத்து கொஞ்சுகிறார். உடனே என்ன சமையல் அம்மா ரொம்ப சந்தோசமாக இருக்கீங்க என கேட்க, நான் உனக்கு என கண்ணம்மா சொல்ல வரும் போது, சௌந்தர்யா வந்துவிடுகிறார். சமையல் அம்மா என கூப்பிட்டு எப்போ வந்தீங்க என கேட்கிறார். உடனே சௌந்தர்யா வேணுவை ஹேமாவை அழைத்து கொண்டு வெளியே போக வேண்டும் என சொன்னீங்க என கேட்க, ஆமாம் என வேணு சொல்கிறார்.
மேலும் ஹேமாவின் தோழி அப்பாவிற்கு நெஞ்சு வலி வந்துவிட்டது என சொல்ல, உடனே ஹேமா அங்கிருந்து கிளம்புகிறார். பின் கண்ணம்மா சௌந்தர்யா அகில் வேணு அஞ்சலியிடம் ஏன் ஒரு குழந்தையை என்னிடம் இருந்து பிரித்து கொண்டு சென்றீர்கள் என கேள்வி கேட்கிறார். இத்தனை நாட்களாக மனதில் எதோ இரு உணர்வு இருந்தது. ஆனால் அந்த டாக்டர் எப்போது என்னிடம் உனக்கு பிறந்தது இரட்டை குழந்தை என சொன்னாரோ அப்பவே எனக்கு தெரிந்துவிட்டது. அவள் என் வயிற்றில் இருக்கும் போது இரட்டை துடிப்பு இப்போது கூட எனக்கு உணர முடிகிறது என சொல்கிறார்.
என் குழந்தைக்கு தாய் பால் கூட கொடுக்க முடியவில்லை என்ற வருத்தம் எனக்கு இருக்கிறது. அவளுக்கும் அம்மா இல்லாமல் அப்படி தான இருக்கும் என கண்ணம்மா சொல்கிறார். அகில் உன்னிடம் ஹேமா யார் என கேட்டேன் ஆனால் நீ சொல்லவில்லை எல்லாரும் என்னை ஏமாற்றி பெரிய பாவம் செய்துவிட்டீர்கள் என சொல்கிறார். உடனே கண்ணம்மா ஹேமா வரட்டும் அது வரை நான் இங்கிருந்து கிளம்பமாட்டேன். ஹேமாவை என்னுடன் அழைத்து செல்ல இருக்கிறேன் என கண்ணம்மா சொல்கிறார்.
ஃபாலோயர்களுக்கு தெரியாமல் அவர்களை நீக்கும் அம்சம் – ட்விட்டரில் புதிய வசதி!
உடனே சௌந்தர்யா கண்ணம்மா இது ரொம்ப பெரிய பிரச்சனையில் கொண்டு சென்று முடிய போகுது உனக்கு புரிகிறதா என சௌந்தர்யா கேட்க, அதற்கு என்னால் ஒன்னும் செய்ய முடியாது என் தப்பு இல்லை என கண்ணம்மா சொல்கிறார். பின் சௌந்தர்யா நீ போன பின் பாரதி பெரிய மன உளைச்சலில் இருந்தான் அவனை மாற்றியது ஹேமா தான் அவள் இப்போது இல்லை என்றால் பாரதி நிலைமை என்ன ஆகும் என சௌந்தர்யா கேட்க, யாரு எப்படி போனால் எனக்கு என்ன இவ்வளவு நாள் நல்லவளாக இருந்து எனக்கு எல்லாம் கிடைத்துவிட்டது என கண்ணம்மா சொல்கிறார். வேணுவும் பதிலுக்கு கெஞ்ச கண்ணம்மா வாழ்க்கை முழுவதும் என் பொண்ணு சமையல் அம்மா என கூப்பிட நான் ஏற்றுக் கொண்டு போகணுமா என கேட்கிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.