ஃபாலோயர்களுக்கு தெரியாமல் அவர்களை நீக்கும் அம்சம் – ட்விட்டரில் புதிய வசதி!
சமூக வலைத்தளமான டிவீட்டரில் நம்மை பாலோ செய்யும் நபர்களை அவர்களுக்கு தெரியாமலே நீக்கும் புதிய அம்சம் குறித்து டிவீட்டர் அறிவித்துள்ளது. அதனை பற்றி இந்த பதிவில் காண்போம்.
புதிய அம்சம்:
பல சமூக வலைத்தளங்கள் தற்போது பரவலாக மக்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதில் சமீப காலமாக மிகவும் பிரபலமாக இருப்பது ட்விட்டர் தளமாகும். அனைத்து துறைகளிலும் உள்ள பிரபலங்கள் முதல் நாட்டின் பிரதமர் வரை அனைவரும் தங்கள் கருத்துக்களை மக்களுக்கு நேரடியாக ட்விட்டர் மூலம் தெரிவித்து வருகின்றனர். இதனால் மிகவும் பிரபலமாக உள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் 4 புதிய நீதிபதிகள் நியமனம் – குடியரசுத் தலைவர் உத்தரவு!
ஆனால் அதேசமயத்தில் தேவையில்லாத வதந்திகளை பரப்பும் நபர்கள் மற்றும் தேவையற்ற செய்திகளை பகிரும் சிலர் நம்மை டிவீட்டர் தளத்தில் பின்தொடர்பவர்களாக இருப்பார்கள். அவர்களுக்கு தெரியாமலே அவர்களை நாம் நீக்கிவிடும் புதிய அம்சம் ஒன்று தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த அம்சத்திற்கு “சாஃப்ட் பிளாக்” என்று பெயரிடப்பட்டுள்ளது. ட்விட்டரின் மொபைல் பதிப்பில் இந்த வசதி இல்லை. ஆனால், நீங்கள் வெப் வெர்ஷனில் உள்நுழைந்து, அங்கிருந்து ஃபாலோவர்களை அகற்றலாம்.
அக். 17 தமிழகத்தில் மெகா தடுப்பூசி முகாம் ரத்து? – அமைச்சர் முக்கிய அறிவிப்பு!
நீங்கள் ஒரு ஃபாலோவரை சாஃப்ட் பிளாக் அல்லது ரிமூவ் செய்த பின், தனிநபருக்கு மாற்றம் குறித்து அறிவிக்கப்படாது. ஆனால் அதே நபர் மீண்டும் உங்களைப் ஃபாலோ செய்வதற்கான விருப்பத்தைப் பெறுவார்கள் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
சாஃப்ட் பிளாக் செய்யும் முறை:
- ஒரு ஃபாலோவரை சாஃப்ட் பிளாக் செய்வதற்கு முதலில் நீங்கள் உங்களின் ப்ரொபைல் பக்கத்திற்கு செல்ல வேண்டும்.
- இப்போது, ”ஃபாலோவர்கள்” என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்.
- அங்கு உள்ள மூன்று புள்ளிகளை தேர்வு செய்ய வேண்டும்.
- தற்போது, ரிமூவ் ஃபாலோவர்” என்பதை நீங்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.
- இப்பொழுது அந்த நபர் உங்கள் ஃபாலோவர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு விடுவார்.