சென்னை உயர்நீதிமன்றத்தில் 4 புதிய நீதிபதிகள் நியமனம் – குடியரசுத் தலைவர் உத்தரவு!
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்கள் கொலீஜியத்தின் பரிந்துரையை ஏற்று சென்னை உயர்நீதிமன்றத்திற்கு 4 புதிய நீதிபதிகளை நியமித்து உத்தரவிட்டுள்ளார்.
புதிய நீதிபதிகள்:
நாட்டின் உச்ச அதிகாரம் பெற்ற உச்ச நீதிமன்றம் டெல்லியில் செயல்பட்டு வருகிறது. மாநிலத்தின் தலைநகரங்களில் உயர்நீதிமன்றங்கள் அமைத்துள்ளது. மேலும், வழக்குகளின் எண்ணிக்கை அதிகரிப்பு மற்றும் விரைவில் வழக்குகள் தீர்வு காணப்பட வேண்டும் என்ற நோக்கில் உயர்நீதிமன்றத்தின் கிளைகள் மற்ற மாவட்டங்களிலும் அமைக்கப்ட்டுள்ளது. சமீபத்தில் உச்சநீதிமன்றத்தின் புதிய நீதிபதிகள் நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், உயர்நீதிமன்ற கொலிஜியம் புதிய பரிந்துரையை மத்திய அரசுக்கு வழங்கி இருந்தது.
அக். 17 தமிழகத்தில் மெகா தடுப்பூசி முகாம் ரத்து? – அமைச்சர் முக்கிய அறிவிப்பு!
இதனால் நாடு முழுவதும் 60க்கும் மேற்பட்ட உயர்நீதிமன்ற நீதிபதிகளை இடமாற்றம் செய்து உச்ச நீதிமன்ற கொலீஜியம், மத்திய அரசுக்குப் பரிந்துரை செய்தது. இந்த பரிந்துரையின் அடிப்படையில் புதிய நீதிபதிகள் நியமனம் நடந்து வருகிறது. மேலும், அக்டோபர் 10ம் தேதி 8 உயர்நீதிமன்றங்களுக்கு புதிய நீதிபதிகள் நியமிக்கப்பட்டனர். தற்போது, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான கொலீஜியம் அமைப்பு அளித்த பரிந்துரையை ஏற்று, சென்னை உயர் நீதிமன்றத்திற்கு 4 புதிய நீதிபதிகள் நியமனம் செய்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார்.
நடந்த திருமணத்தை மறைத்த பிக் பாஸ் பிரபலம் – இணையத்தில் வெளிவந்த அதிர்ச்சி புகைப்படங்கள்!
சென்னை உயர்நீதிமன்றத்தின் நீதிபதிகளின் அதிகபட்ச எண்ணிக்கை 75 ஆகும். தற்போது நியமிக்கப்பட்ட 4 நீதிபதிகளின் எண்ணிக்கையும் சேர்ந்து மொத்த நீதிபதிகளின் எண்ணிக்கை 55ஆக உயர்ந்துள்ளது. நீதிமன்றங்களில் தேங்கியிருக்கும் வழக்குகளுக்கு விரைவில் தீர்வு காணும் நோக்கத்தில் இந்த நியமனம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, வழக்கறிஞர்கள் சுந்தரம் ஸ்ரீமதி, பரத சக்ரவர்த்தி, விஜயகுமார், முகமது ஷபிக் ஆகியோரை நீதிபதிகளாக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நியமித்து உத்தரவிட்டுள்ளார்.