தமிழகத்தில் அதிரடியாக குறைந்த கொரோனா பாதிப்பு, கடந்த 24 மணி நேரத்தில் 1,289 பேருக்கு கொரோனா – சுகாதாரத்துறை அறிக்கை!
தமிழகத்தில் கடந்த 24 மணி நேர நிலவரப்படி கொரோனா பாதிப்பு அதிரடியாக குறைந்துள்ளது. இதனால் புதிதாக 1,289 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா பாதிப்பு:
தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. இதனால் கொரோனா ஊரடங்கு கால கட்டுப்பாடுகளில் கூடுதல் தளர்வுகளை அளிக்க அரசு ஆலோசித்து வருகிறது. இது தொடர்பாக நாளை முதல்வர் ஆலோசனை கூட்டம் நடத்த உள்ளார். இந்நிலையில், இன்று மேலும், தினசரி பாதிப்பு எண்ணிக்கை அதிரடியாக குறைந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அரசு அளித்த அறிக்கையின் படி, புதிதாக தமிழகத்தில் 1,289 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தீவிரவாதத்தை தடுக்க உலக நாடுகள் ஒன்று கூட வேண்டும் – இந்தியா அழைப்பு!
இதன் மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 26,80,857 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 18 பேர் தொற்று பாதிப்பினால் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் மொத்த பலி எண்ணிக்கை 35,814 ஆக உயர்ந்துள்ளது. 1,421 பேர் தொற்று பதிப்பில் இருந்து ஒரே நாளில் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் மொத்தம் 26,29,201 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலை திட்டங்கள் செயல்பாடு – மத்திய அமைச்சரிடம் கோரிக்கை!
நேற்றைய மாலை நிலவரப்படி, தமிழகத்தில் உள்ள மருத்துவமனைகளில் மொத்தம் 15,842 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று மட்டும் 1,37,548 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை 4,87,41,297 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. சென்னையில் நேற்று ஒரு நாளில் 164 பேர் பாதிக்கப்ட்டுள்ளனர் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.