தீவிரவாதத்தை தடுக்க உலக நாடுகள் ஒன்று கூட வேண்டும் – இந்தியா அழைப்பு!
மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் பருவநிலை மாற்றம், கொரோனா தொற்று விவகாரம் போன்று தீவிரவாதத்தை ஒடுக்கவும் சர்வதேச நாடுகள் ஒன்றிணைய வேண்டும் என்று உலக நாடுகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
சுற்றுப்பயணம்:
ஆஃப்கானிஸ்தான் நாட்டில் தாலிபான்கள் ஆட்சி அமைந்த பிறகு தீவிரவாதம் தலைதூக்குவதாக உலக நாடுகள் அனைத்தும் எச்சரிக்கை விடுத்தது வருகிறது. இதற்கான ஆலோசனைகளையும் நடத்தி வருகிறது. இந்நிலையில், இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் இரண்டு நாள் சுற்றுப்பயணமாக கிர்கிஸ்தான், கஜகஸ்தான் மற்றும் ஆர்மீனியா ஆகிய நாடுகளுக்கு சென்றுள்ளார். மத்திய ஆசிய நாடுகளுடனான உறவை இந்தியாவுடன் மேலும் வலுப்படுத்தும் நோக்கத்தில் இந்த பயணம் திட்டமிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலை திட்டங்கள் செயல்பாடு – மத்திய அமைச்சரிடம் கோரிக்கை!
கிர்கிஸ்தான் நாட்டிற்கு முதலாவதாக சென்ற நிலையில், நேற்று கஜகஸ்தான் சென்றார். அங்கு, 6வது வெளியுறவு அமைச்சர்கள் மாநாட்டில் கலந்து கொண்டார். அப்போது, சர்வதேச கொள்கைகளின் அடிப்படையில் ஒரு நாட்டின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டை மதிக்க வேண்டும். அமைதி, முன்னேற்றம் மட்டுமே நமது குறிக்கோளாக இருந்தால் தீவிரவாதத்தை எளிதில் வென்று விடலாம். தற்போதைய கால கட்டத்தில் தீவிரவாதத்தை மட்டுமே வைத்து கொண்டு ஒருநாட்டை எதிர்கொள்வது என்பது முடியாது.
ஃபாலோயர்களுக்கு தெரியாமல் அவர்களை நீக்கும் அம்சம் – ட்விட்டரில் புதிய வசதி!
தனது எல்லை கடந்த தீவிரவாதம் ஒரு ஆட்சியின் சிறந்த கலை நுணுக்கம் அல்ல. அதுவும் தீவிரவாதத்தின் மற்றொரு முகமாகும். கொரோனா தொற்று பரவல், பருவநிலை மாற்றம் போன்ற உலகளாவிய பிரச்னைகளில் நாட்டுக்கு நாடு உதவி செய்து ஒருங்கிணைந்து செயல்பட்டது போன்று தீவிரவாதத்தை ஒடுக்க சர்வதேச நாடுகள் ஒன்றிணைய வேண்டும் என்று கூறியுள்ளார்.