கண்ணனிற்கு குழம்பு கொடுக்கும் தனம், கயலை தூக்க வீட்டிற்கு வரும் கண்ணன் – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!!

0
கண்ணனிற்கு குழம்பு கொடுக்கும் தனம், கயலை தூக்க வீட்டிற்கு வரும் கண்ணன் - இன்றைய
கண்ணனிற்கு குழம்பு கொடுக்கும் தனம், கயலை தூக்க வீட்டிற்கு வரும் கண்ணன் - இன்றைய "பாண்டியன் ஸ்டோர்ஸ்" எபிசோட்!!
கண்ணனிற்கு குழம்பு கொடுக்கும் தனம், கயலை தூக்க வீட்டிற்கு வரும் கண்ணன் – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!!

விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், தனம் கண்ணனிற்கு பிடித்த கார குழம்பு வைக்க, ஐஸ்வர்யா கொஞ்சம் குழம்பு தாங்க என சொல்லி தனத்திடம் கேட்கிறார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ்:

இன்று “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், தனம் கண்ணனிற்கு பிடித்த கத்திரிக்காய் குழம்பு வைக்க, கண்ணன் வாசனை பிடித்து ஐஸ்வர்யாவிடம் என் அண்ணி வைக்கும் குழம்பு எப்படி இருக்கும் தெரியுமா என புகழ்ந்து பேசுகிறார். உடனே ஐஸ்வர்யா நான் செய்து தரவா என கேட்க, என் அண்ணி கை பக்குவம் யாருக்கும் வராது என கண்ணன் சொல்கிறார். உடனே ஐஸ்வர்யா நான் சென்று குழம்பு வாங்கி வருகிறேன் என சொல்ல, கண்ணன் சீக்கிரமாக போ என சொல்லி அனுப்பி வைக்கிறார்.

பின் ஐஸ்வர்யா பின் வாசல் வழியாக சென்று நிற்கிறார். தனம் சமைத்துவிட்டு முல்லை மற்றும் மீனாவிடம் டேஸ்ட் பார்க்க கொடுக்கிறார். அவர்கள் சாப்பிட்டு பார்த்து நன்றாக இருக்கிறது என சொல்கிறார். உடனே ஐஸ்வர்யா பின் பக்கம் இருந்து கூப்பிட மூன்று பேரும் வருகின்றனர். என்ன வேண்டும் என கேட்க, உங்க வீட்டில் இன்னைக்கு கத்திரிக்காய் குழம்பா வாசனை எங்க வீடு வரை வந்தது அதனால் என் கணவருக்கு சாப்பிடணும் போல இருக்கிறதாம். கொஞ்சம் குழம்பு தாங்க என ஐஸ்வர்யா கேட்கிறார்.

ஹேமாவை அழைத்து செல்ல பிடிவாதம் பிடிக்கும் கண்ணம்மா, கெஞ்சி கேட்கும் சௌந்தர்யா – இன்றைய “பாரதி கண்ணம்மா” எபிசோட்!

உடனே தனம் அதெல்லாம் முடியாது என சொல்லி உள்ளே செல்கிறார். உடனே ஐஸ்வர்யா குழம்பு தரமாட்டார்கள் என சொல்லி உள்ளே செல்கின்றனர். உடனே அனைவரும் சாப்பிட்ட பின் தனம் யாருக்கும் தெரியாமல் சாப்பாடு எடுத்துக் கொண்டு சென்று சரண்யா என கூப்பிடுகிறார். உடனே ஐஸ்வர்யா வெளியே வர மீனா வந்து என்ன என்று பார்க்கிறார். குழம்பு கொடுக்க நிற்பதை பார்த்து அவர் நான் கொண்டு சென்று கொடுக்கிறேன் என சொல்கிறார். உடனே தனம் குழம்பு கிண்ணத்தை வெளியே வைத்துவிட்டு உள்ளே செல்கிறார்.

தமிழகத்தில் அதிரடியாக குறைந்த கொரோனா பாதிப்பு, கடந்த 24 மணி நேரத்தில் 1,289 பேருக்கு கொரோனா – சுகாதாரத்துறை அறிக்கை!

ஐஸ்வர்யா அதை எடுத்துக் கொண்டு சென்று கண்ணனிடம் சாப்பிட கொடுக்கிறார். அவர் சாப்பிட்டுவிட்டு என் அண்ணி சமைத்தது எப்படி இருக்கிறது என பாரு என சொல்லிவிட்டு, நீயும் சாப்பிடு இல்லை என்றால் அனைத்தையும் நான் சாப்பிட்டுவிடுவேன் என சொல்கிறார். பின் இருவரும் காலேஜ் கிளம்ப ஐஸ்வர்யா நான் வரவில்லை என சொல்கிறார். பின் கண்ணன் வாசலில் நிற்கும் போது, கயல் பாப்பா அழுது கொண்டே இருக்கிறது. நீண்ட நேரம் அழுததும் கண்ணன் உள்ளே சென்று தூக்கி சென்று சமாதானம் செய்கிறார். சத்தம் கேட்டு தனம் மீனா வருகின்றனர். ஆனால் கண்ணன் ஐஸ்வர்யா கயல் பாப்பாவை கொஞ்சுகின்றனர். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!