கண்ணம்மா மீது அக்கறையாக இருக்கும் பாரதி, சந்தோஷத்தில் சௌந்தர்யா – “பாரதி கண்ணம்மா” சீரியலில் இன்றைய எபிசோட்!
விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில், கண்ணம்மாவின் புத்திசாலித்தனமான திட்டத்தால் தான் சக்திக்கு நல்ல படியாக உயிரை காப்பாற்ற முடிந்தது என பாரதி கண்ணம்மாவை புகழ்ந்து பேசுகிறார். பின் கண்ணம்மாவை புகழ்ந்து பேசியதால் சௌந்தர்யா சந்தோசமாக இருக்கிறார்.
பாரதி கண்ணம்மா:
இன்று “பாரதி கண்ணம்மா” சீரியலில், கண்ணம்மாவால் தான் சக்திக்கு ஆப்ரேசன் நடந்தது என பாரதி புகழ்ந்து பேசுகிறார். முதலில் ஆயிஷாவின் அம்மா அப்பா இதயத்தை கொடுக்க ஒப்புக் கொள்ளவில்லை. அதனால் கண்ணம்மா தான் சக்தியின் அம்மா அப்பாவை அழைத்து வந்து பேச வைத்தார். பின் மழையின் காரணமாக சாப்பர் மூலமாக இதயத்தை கொண்டு வர முடியாமல் இருந்தது. ஆனால் கண்ணம்மா முன்னெச்சரிக்கையாக ரோடு வழியாக செல்ல ஏற்பாடு செய்து வைத்திருந்தார். அதனால் தான் சரியான நேரத்தில் கொண்டு வர முடிந்தது.
TN Job “FB Group” Join Now
மேலும் வரும் வழியில் மழை வந்தது உங்களுக்கு தெரியும் அப்போது கண்ணம்மா தான் இன்னொரு அம்புலன்ஸ் வரவழைத்து சக்திக்கு சரியான நேரத்தில் இதயத்தை கொண்டு வர முடிந்தது. அதனால் என்னைவிட கண்ணம்மாவால் தான் எல்லாம் நல்லபடியாக நடந்தது என சொல்கிறார். பின் கண்ணம்மா பேச பாரதி டாக்டரால் தான் எல்லாம் நல்லபடியாக நடந்தது. அவர் தான் விழுப்புரத்தில் சரி சென்னையிலும் சரி ஆப்ரேசன் செய்தார். அது எவ்வளவு பெரிய விஷயம் என கண்ணம்மா பாரதியை புகழ்ந்து பேசுகிறார்.
அதை கேட்டு சௌந்தர்யா மற்றும் வெண்பாவின் அம்மா ஷர்மிளா என அனைவரும் சந்தோசமாக இருக்கின்றனர். ஷர்மிளா கண்ணம்மா பாரதியை புகழ்ந்து பேச வெண்பாவிற்கு பிடிக்காமல் இருக்கிறது. பாரதிக்கு கண்ணம்மா மீது இருப்பது சிறிய கோவம் தான் அது சீக்கிரமாக சரியாகிவிடும் அவன் கண்ணம்மாவை விட்டு உன்னை திருமணம் செய்வான் நீ நினைத்தது எல்லாம் உன்னுடைய முட்டாள் தனம் என சொல்கிறார்.பின் வெண்பா அதை நினைத்து கோபப்படுகிறார்.
ஷிவ் நாடார் முதல் ராம் ஸ்ரீராம் வரை – தமிழகத்தின் டாப் பணக்காரர்களின் பட்டியல் வெளியீடு!
பின் சௌந்தர்யா வேணு அகில் எல்லாரும் கண்ணம்மாவை நினைத்து சந்தோசப்படுகின்றனர். மறுபக்கம் பாரதி டாக்டருடன் பேசிக் கொண்டிருக்க கண்ணம்மா நர்ஸிடம் சாப்பிட போகலாம் என சொல்கிறார். ஆனால் கண்ணம்மாவால் முடியாமல் அவர் மயக்கம் போட்டு விழுகிறார். உடனே பாரதியை அழைத்த அவர்கள் கண்ணம்மாவை சோதனை செய்து பார்த்துவிட்டு தண்ணீர் தெளித்து எழுப்புகின்றனர். பின் கண்ணம்மா நேற்று முதல் சாப்பிடவில்லை என சொல்கிறார். அதை கேட்டு பாரதி வருத்தப்பட்டு உன் உடம்பை நீ தான் பார்த்துக் கொள்ள வேண்டும் என அறிவுரை சொல்கிறார்.
விக்ரம் பாரதியின் அக்கறையை பார்த்து சந்தோசப்படுகிறார். பின் சௌந்தர்யா வேணு அகில் அஞ்சலி அனைவரும் பாரதி கண்ணம்மாவை புகழ் பேசியதை பற்றியும் கண்ணம்மா பாரதியை பற்றி பேசியதை நினைத்தும் சந்தோசப்படுகின்றனர். பாரதிக்கு கண்ணம்மா மீது அக்கறை வந்துள்ளது என சொல்ல அதை இருவரும் செய்தது மிகப்பெரிய விஷயம் என அகில் சொல்கிறார். சீக்கரம் இருவருக்கும் இடையே நெருக்கம் வர வேண்டும் என சொல்கிறார்.