விஜய் டிவி ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் வில்லி வெண்பா வெளியிட்ட புகைப்படம் – ரசிகர்கள் உற்சாகம்!
சின்னத்திரையில் நடிக்கும் நடிகை நடிகர்களுக்கு ரசிகர் பட்டாளங்கள் உள்ளது எதார்த்தமான ஒன்று. ஆனால் வில்லியையும் ரசிக்க முடியும் என்ற அளவுக்கு தனது அழகான நடிப்பால் மக்கள் மனதை கொள்ளை கொண்டவர் பரீனா. நேற்று அவரது குழந்தையுடன் அன்னையர் தினத்தை கொண்டாடியுள்ளார்.
பாரதி கண்ணம்மா வில்லி:
சன் டிவியில் தொகுப்பாளராக மீடியாவிற்குள் நுழைந்த பரீனா அதே தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய அழகு சீரியலில் முக்கியமான ரோலில் வாய்ப்பு கிடைத்து நடித்து வந்தார். அங்கிருந்து விஜய் டிவிக்கு வந்தவர் பாரதி கண்ணம்மா சீரியலில் வில்லியாக அறிமுகமானார். கதைக்களத்தை வைத்து பார்க்கையில் ரசிகர்கள் பரீனாவை கழுவி ஊற்றினாலும் உருவத்திலும், நடிப்பிலும் ரசிகர்களை ஈர்த்தவர். அதாவது அவரது கண்ணக்குழி சிரிப்பாலும், வட்ட முகத்துக்கும் தனி ரசிகர்கள் கூட்டம் இருக்கத்தான் செய்கிறது.
மத்திய அரசு ஊழியர்களுக்கு மீண்டும் அகவிலைப்படி (DA) உயர்வு? அடுத்த அமைச்சரவை கூட்டத்தில் முடிவு!
இவர் விஜய் டிவி சீரியல் மட்டுமல்லாமல் சில ரியாலிட்டி ஷோக்களிலும் கலந்து கொள்வார். ரகுமான் என்பவரை திருமணம் செய்து கொண்ட பரீனா கடந்தாண்டு தான் கர்ப்பமாக இருக்கும் இன்ப செய்தியை இன்ஸ்ட்டா மூலம் தெரிவித்திருந்தார். ஒருபக்கம் பலரும் வாழ்த்துக்கள் தெரிவிக்க மற்றொரு பக்கம் அதிக நெகட்டிவ் கமெண்டுகளும் வந்து கொண்டுதான் இருந்தது. ஆனாலும் அதையெல்லாம் பொருட்படுத்தாத பரீனா தொடர்ந்து குழந்தையுடன் நிறை மாதம் நெருங்கும் வரை நடித்து மாஸ் காட்டினார்.
Exams Daily Mobile App Download
அப்போது தண்ணீருக்கு அடியில் அவர் நடத்திய கர்ப்பகால போட்டோ சூட் மிகவும் பிரபலம். குழந்தை பிறந்த பிறகு மீண்டும் சீரியலுக்கு எப்போதும் போல் வந்து அவரது நடிப்பால் ஹிட் கொடுத்து தான் வருகிறார். இந்நிலையில் நேற்றைய அன்னையர் தினத்தை தனது மகனுடன் கொண்டாடியுள்ளார். அதாவது குழந்தையுடன் போட்டோ சூட் செய்து அந்த புகைப்படங்களை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு முதல் அன்னையர் தினத்தை கொண்டாடியுள்ளார் பரீனா. அனைத்து போட்டோக்களும் பார்ப்பதற்கே அவ்ளோ க்யூட்டாக இருந்தது.