மத்திய அரசு ஊழியர்களுக்கு மீண்டும் அகவிலைப்படி (DA) உயர்வு? அடுத்த அமைச்சரவை கூட்டத்தில் முடிவு!
பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையிலான மத்திய அமைச்சரவையின் அடுத்த கூட்டத்தில் அகவிலைப்படி (DA) உயர்வு குறித்து முடிவு எடுக்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்த கூடுதல் விவரங்களை இப்பதிவில் காணலாம்.
அகவிலைப்படி உயர்வு
மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு வரும் ஜூலை மாதத்திற்கான அகவிலைப்படி (DA) உயர்வுத் தொகை கிடைக்கும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. இது குறித்து வெளியான ஊடக அறிக்கையின்படி, பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் துறைகளில் பணிபுரியும் லட்சக்கணக்கான மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை (DA) மீண்டும் அதிகரிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது என்று சொல்லப்பட்டுள்ளது. அந்த வகையில் இம்முறை அரசு ஊழியர்களுக்கு 3 முதல் 4 சதவீதம் வரை DA அதிகரிக்கப்படும் என்று சம்பந்தப்பட்ட வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
தமிழகத்தில் 11ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – நாளை முதல் பொதுத்தேர்வு!
அதாவது, ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் சரிவைக் கண்ட AICPI இன்டெக்ஸ் இப்பொது மார்ச் மாதத்தில் உயர்ந்துள்ளது. இந்த AICPI புள்ளிகள் அடுத்த மாதங்களில் உயர்வடைந்தால் மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியில் உயர்வு இருக்கும். இப்போது 7வது ஊதியக் குழுவின் பரிந்துரைகளின்படி அரசு அகவிலைப்படியை 3 சதவீதம் உயர்த்தினால், மத்திய அரசு ஊழியர்களுக்கு மொத்த அகவிலைப்படி 37 சதவீதமாக மாறும்.
Exams Daily Mobile App Download
அந்த வகையில் அகவிலைப்படியை உயர்த்த அரசு முடிவு செய்தால், பல்வேறு துறைகளில் பணிபுரியும் கோடிக்கணக்கான ஊழியர்கள் நேரடியாகப் பயனடைவார்கள். இதற்கிடையில் கடைசியாக கடந்த மார்ச் மாதத்தில் மத்திய அரசு ஊழியர்களுக்கான DA உயர்த்தப்பட்டது. மத்திய அரசின் கீழ் பணிபுரியும் ஊழியர்களுக்கு தற்போது வரை 34 சதவீத டிஏ வழங்கப்படுகிறது. இப்போது அகவிலைப்படி தொடர்பான அடுத்த உயர்வு அறிவிக்கப்பட்டால் 50 லட்சத்துக்கும் அதிகமான மத்திய அரசு பணியாளர்கள் மற்றும் 65 லட்சம் ஓய்வூதியதாரர்கள் பலனடைவார்கள்.