கண்ணம்மாவுடன் சேர்ந்து வாழும் பாரதி, சௌந்தர்யா சொல்வதை கேட்பாரா? ரசிகர்கள் எதிர்பார்ப்பு!
பாரதி கண்ணம்மா தொடரில் தற்போது மிகவும் பரபரப்பான காட்சிகள் ஒளிபரப்பாகி வரும் நிலையில், அடுத்ததாக வர இருக்கும் திருப்பங்கள் குறித்து ரசிகர்கள் அதிகம் எதிர்பார்க்க தொடங்கி விட்டனர்.
பாரதி கண்ணம்மா:
பாரதி கண்ணம்மா தொடரில் வரும் கதை யாரும் எதிர்பார்க்க வகையில் , இப்படியெல்லாம் கூட நடக்குமா என்று என்னும் வகையில் உள்ளது. கதைப்படி மருத்துவராக இருக்கும் பாரதி, தனது மனைவி கண்ணம்மா மீது தோழி வெண்பாவின் சூழ்ச்சி காரணமாக சந்தேகப்படுகிறார். இதனால் இவர்கள் இருவரும் பிரிந்து எட்டு வருடங்களும் கடந்து விட்டது. ஆனாலும் இவர்களுக்குள் உள்ள சண்டை மட்டும் ஓயவே இல்லை. மருத்துவராக இருக்கும் பாரதி சிறிது சிந்தித்து செயல்பட்டாலும் கதையின் முடிவு வந்து விடும்.
மீண்டும் வெள்ளித்திரையில் தடம் பதிக்கும் பிரபல சீரியல் நடிகை – ரசிகர்கள் வாழ்த்து!
ஆனால் அப்படி ஒரு சந்தர்ப்பம் மட்டும் இன்னும் கதையில் வரவில்லை. இந்நிலையில், கண்ணம்மாவிடம் இருந்து பிரிந்து விவாகரத்து பெற்று விட துடிக்கும் பாரதி, நீதிமன்றத்தை நாடுகிறார். ஆனால் எதிர்பாராத விதமாக நீதிமன்றம் இவர்கள் இருவரும் கண்டிப்பாக சேர்ந்து ஆறு மாதங்கள் வாழ வேண்டும் என்று உத்தரவிட்டு விடுகிறது. இந்த உத்தரவினால் அனைவரும் மகிழ்ச்சி அடைகின்றனர். ஆனால் பாரதி மட்டும் கோவப்படுகிறார். இந்நிலையில், கண்ணம்மா எப்போது வருவார் என்று குடும்பத்தினர் அனைவரும் எதிர்பார்த்து இருக்கின்றனர்.
பிரசவத்திற்கு பிறகு ‘பாரதி கண்ணம்மா’ ஃபரீனாவின் மனதை உருக்கும் பதிவு – ரசிகர்கள் நெகிழ்ச்சி!
இது குறித்து கண்ணம்மாவிடம் சௌந்தர்யா கால் செய்து எப்போது வருகிறாய் என்று கேட்கிறார். அதற்கு கண்ணம்மா உங்க புள்ள தான் சொல்லணும் என்று சொல்கிறார். இதனால் குடும்பத்தை உள்ள அனைவரும் பாரதியை கண்ணம்மாவுடன் சேர்ந்த வாழ வேண்டும் என்று தொல்லை செய்கின்றனர். இதனால் பாரதி மிகவும் குழப்பமடைந்துள்ளார். ஆனால் பாரதி கண்ணம்மாவுடன் தான் சேர்ந்து வாழ வேண்டும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். இது குறித்து இனி வரும் காட்சிகளில் அறிந்து கொள்ளலாம்.