பிரசவத்திற்கு பிறகு ‘பாரதி கண்ணம்மா’ ஃபரீனாவின் மனதை உருக்கும் பதிவு – ரசிகர்கள் நெகிழ்ச்சி!

0
பிரசவத்திற்கு பிறகு 'பாரதி கண்ணம்மா' ஃபரீனாவின் மனதை உருக்கும் பதிவு - ரசிகர்கள் நெகிழ்ச்சி!
பிரசவத்திற்கு பிறகு 'பாரதி கண்ணம்மா' ஃபரீனாவின் மனதை உருக்கும் பதிவு - ரசிகர்கள் நெகிழ்ச்சி!
பிரசவத்திற்கு பிறகு ‘பாரதி கண்ணம்மா’ ஃபரீனாவின் மனதை உருக்கும் பதிவு – ரசிகர்கள் நெகிழ்ச்சி!

பாரதி கண்ணம்மா தொடரில் வெண்பா கதாபாத்திரத்தில் வில்லியாக நடித்து வரும் ஃபரீனா கடந்த வாரத்தில் தனது குழந்தையை பெற்றெடுத்துள்ளார். இந்நிலையில் தனது இன்ஸ்டா பக்கத்தில் மனதை உருக்கும் வகையிலான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

பாரதி கண்ணம்மா வெண்பா:

சின்னத்திரையில் வழக்கமாக கதாநாயகிகளுக்கு இணையாக, வில்லிகளும் பிரபலமடைவார்கள். ஹீரோயின்களுக்கு வில்லிகள் கொடுக்கும் தொல்லையின் காரணமாக தான் கதாநாயகிகள் மக்கள் மனதில் பெரிய இடத்தை பிடிக்கின்றனர். இதனால் கதாநாயகிகள் பாசிட்டிவ் முறையிலும், வில்லிகள் நெகட்டிவ் முறையிலும் அதிகமாக பேசப்படுகிறார்கள். அந்த வகையில், பாரதி கண்ணம்மா தொடரின் வில்லி கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் அதிக புகழை அடைந்தவர் நடிகை ஃபரீனா.

மீண்டும் பழைய புன்னகையுடன் எழுந்து நின்ற “யாஷிகா ஆனந்த்” – வைரலாகும் வீடியோ! ரசிகர்கள் உற்சாகம்!

இவர் கடந்த வாரத்தில் தான் அழகிய ஆண் குழந்தை ஒன்றை பெற்றுள்ளார். இதனால் ஃபரீனாவிற்கும், அவரது கணவருக்கும் பல தரப்புகளில் இருந்து வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. ஃபரீனா தனது கர்ப்ப காலத்திலும் கூட ஓய்வெடுக்காமல் தொடர்ந்து நடித்து வந்தார். தனது பிரசவத்திற்கு சில நாட்களுக்கு முன்னதாக தான் படப்பிடிப்பில் இருந்து ஒதுங்கி ஓய்வெடுக்க தொடங்கினார். தற்போது பிரசவத்திற்கு பிறகு, ஃபரீனா தனது குழந்தையின் கையை பிடித்தபடியான புகைப்படத்துடன் இன்ஸ்டா பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், எவ்வளவு எதிர்மறை மற்றும் மோசமான கருத்துக்கள் இருந்தபோதிலும் நான் அழகான குழந்தையை பிரசவித்துள்ளேன்.

நாக சைதன்யாவிற்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்காத சமந்தா – ரசிகர்கள் குற்றச்சாட்டு!

கர்ப்ப காலம் முழுவதும் மிகவும் சுறுசுறுப்பாக இருப்பது, பிரசவத்தின் இறுதி வாரம் வரை வேலை பார்த்தது, உடற்பயிற்சிகள், யோகா போன்றவை பிரசவத்தை சுலபமாக்கியது. கர்ப்பம் என்பது வாழ்க்கையின் ஒரு கட்டம், நீங்கள் நீங்களாக இருங்கள். அதற்காக நீங்கள் பார்க்கும் வேலையை விட வேண்டும் என்ற அவசியம் இல்லை என்று மற்ற பெண்களுக்கு ஊக்கமளிக்கும் வகையிலும், கர்ப்ப காலத்தின் போது நன்றாக கவனித்து கொண்ட அனைவரும் நன்றியையும், கடைசி வர வெண்பாவாக வைத்திருந்த பாரதி கண்ணம்மா இயக்குனர் பிரவீன் பென்னட் அவர்களுக்கும், தனது கணவருக்கு எப்போதும் அன்பும் என்று தெரிவித்து பதிவிட்டுள்ளார். இந்த பதிவினை பார்த்த ரசிகர்கள் மிகவும் நெகிழ்ந்துள்ளனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!