நாக சைதன்யாவிற்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்காத சமந்தா – ரசிகர்கள் குற்றச்சாட்டு!
தென்னிந்திய திரை உலகின் பிரபல ஸ்டார் ஜோடிகளின் வரிசையில் முன்னணியில் இருந்தவர்கள் சமந்தா மற்றும் நாக சைதன்யா. இவர்கள் சமீபத்தில் பிரிந்துள்ள நிலையில், இருவரை பற்றிய செய்தி ஒன்று வெளிவந்துள்ளது.
ரசிகர்கள் குற்றச்சாட்டு:
தெலுங்கு திரை உலகின் சூப்பர் ஹிட் ஜோடிகளாக வலம் வந்தவர்கள் சமந்தா மற்றும் நாக சைதன்யா. சமந்தா முன்னதாக பல படங்களில் நடித்திருந்த போதிலும், கவுதம் மேனனின் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் சிறு வேடத்தில் தோன்றியதன் மூலம் தான் மக்கள் கவனத்தை பெற்றார். இந்த படத்தில் தெலுங்கு ரீமேக்கிங்கின் போது நாக சைதன்யா மற்றும் சமந்தா இருவரும் சேர்ந்து நடித்தார்கள். இந்த படம் இவர்களின் திரை உலக வாழ்க்கையில் பெரிய திருப்புமுனையாக இருந்தது. அதன் பிறகு, சமந்தா தமிழ் மற்றும் தெலுங்கு இரு மொழிகளிலும் மிகவும் பிரபலமாகி விட்டார்.
‘பிக் பாஸ்’ வீட்டை விட்டு வெளியேறும் பாவ்னி? இந்த வார எலிமினேஷன்! ரசிகர்கள் அதிர்ச்சி!
அதேபோல், நாக சைதன்யாவும் அடுத்தடுத்து நடித்த படங்களின் மூலம் புகழின் உச்சிக்கு சென்றார். இவர்கள் இருவரும் காதலிக்க தொடங்கிய சில வருடங்களில், கடந்த 2017ம் ஆண்டு மிகவும் பிரமாண்டமாக திருமணம் செய்து கொண்டனர். மொத்த திரை உலகினரும் திரும்பி பார்க்கும் வகையில் இவர்களின் திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு பிறகும், இருவரும் மிகவும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தனர். சமந்தா முன்னர் விட அதிக படங்களில் மிகவும் பிசியாக நடித்துக் கொண்டிருந்தார். இந்நிலையில், இவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த மாதம் இருவரும் பிரிந்து விடுவதாக அறிவித்திருந்தனர்.
‘ராஜா ராணி 2’ சீரியல் ஆல்யா மனசாவிற்கு சுகப்பிரசவம் – டெலிவரி பிளான்! அவரே அளித்த பதில்!
இதனால் இவர்களின் ரசிகர்கள் மிகவும் கவலையில் ஆழ்ந்தனர். இந்நிலையில், நவம்பர் 23ம் தேதியான நேற்று நாக சைதன்யாவிற்கு பிறந்தநாள் வந்தது. வழக்கமாக சமந்தா நாக சைதன்யாவின் பிறந்த நாளிற்கு சமூக வலைத்தளங்களில் பதிவுகளின் மூலம் தனது வாழ்த்தை தெரிவிப்பார். ஆனால் நேற்று அவர் சைதன்யாவின் பிறந்த நாளிற்கு வாழ்த்து தெரிவிக்கவில்லை. சமந்தா தற்போது கோவாவில் நடக்கும் சர்வதேச திரைப்பட விழாவில் கலந்து கொண்டுள்ளார். இருவரும் பிரிந்து இரண்டு மாதங்கள் ஆகியுள்ள நிலையில், சமந்தா நாக சைதன்யாவின் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவிக்கவில்லை என்று பலரும் சர்ச்சையான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.