தமிழக L&T நிறுவனத்தில் 1100 பேருக்கு வேலைவாய்ப்பு – மிகப்பெரிய டேட்டா சென்டர்!
லார்சன் அண்ட் டூப்ரோ என்ற நிறுவனம் காஞ்சிபுரம் மாவட்டத்தில் பெரிய டேட்டா மையத்தை நிறுவ தமிழக அரசுடன் இணைந்துள்ளது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது. இந்த நிறுவனத்தின் மூலம் 1,100 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
டேட்டா சென்டர்:
தமிழகத்தில் கடந்த வருடம் முதல் பரவி வரும் கொரோனா பெருந்தொற்றால் விதிக்கப்பட்ட ஊரடங்கால் மாநிலம் பெரும் பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகிறது. கொரோனா சிகிச்சைக்கான மருத்துவ கட்டமைப்பு, மருந்துகள், தடுப்பூசிகள், நிவாரண தொகைகள் போன்றவற்றிற்காக அரசு நிதிகளை ஒதுக்கி தேவையான பணிகளை செய்து வருகிறது. தற்போது அரசின் முயற்சியால் கொரோனா கட்டுக்குள் வந்ததை அடுத்து மாநிலத்தின் வளர்ச்சி குறித்து ஆலோசித்து வருகிறது. அந்த வகையில் கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்ற மானிய கோரிக்கை விவாதத்தின் போது அந்தந்த துறை சார்பாக அமைச்சர்கள் பல்வேறு திட்டங்களை அறிவித்தனர்.
Wipro நிறுவனத்தில் பொறியியல் பட்டதாரிகளுக்கு புதிய வேலைவாய்ப்பு – முழு விவரம் இதோ!
தற்போது அவை ஒவ்வொன்றாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வளர்ச்சி பனியின் ஒரு பகுதியாக லார்சன் அண்ட் டூப்ரோ என்ற நிறுவனத்துடன் தமிழக அரசு இணைந்துள்ளது. இந்நிறுவனம் அடுத்த 5 ஆண்டுகளில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் 90 மெகா வாட் திறன் கொண்ட டேட்டா மையத்தை தொடங்கவுள்ளது. இந்த டேட்டட் மையம் ஒருங்கிணைப்பு டிஜிட்டல் சேவைகளை வழங்கும். மேலும் இதன் மூலம் 600 பேர் நேரடியாகவும், 500 பேர் மறைமுகமாகவும் என மொத்தம் 1,100 பேர் வேலைவாய்ப்பை பெறுவர் என்று அரசு தெரிவித்துள்ளது.
சென்னை: அதிரடியாக குறைந்த ஆபரணத் தங்கத்தின் விலை – நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி!
இது குறித்து பேசிய லார்சன் அண்ட் டூப்ரோ நிறுவன தலைவர் கூறுகையில், தமிழகத்தின் வளர்ச்சி பாதைக்கு இந்த டேட்டா மையம் உதவும். தமிழக அரசுடன் இணைந்ததற்கு நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம் என்று தெரிவித்துள்ளார். ஏற்கனவே பல கோடி ரூபாய் மதிப்பிலான முதலீட்டில் பன்னாட்டு நிறுவனங்களுடன் தொழில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது குறிப்பிடத்தக்கது. தற்போது புதிய புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. அதனால் இனி வருங்காலங்களில் தமிழகத்தில் அதிக வேலைவாய்ப்புகள் உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.