Wipro நிறுவனத்தில் பொறியியல் பட்டதாரிகளுக்கு புதிய வேலைவாய்ப்பு – முழு விவரம் இதோ!
இந்தியாவின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனமான விப்ரோ புதிய மற்றும் அனுபவம் வாய்ந்த பொறியியல் பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்புகளை அளிக்க இருப்பதாக அறிவித்துள்ளது. இது குறித்த கூடுதல் விவரங்களை இப்பதிவில் காணலாம்.
வேலை வாய்ப்புகள்
இந்தியாவில் IT உள்ளிட்ட பல தனியார் துறை நிறுவனங்கள், கொரோனா நோய் தொற்றுக்கு முந்தைய நிலைக்கு மெதுவாக திரும்பி வருகிறது. அந்த வகையில் இந்நிறுவனங்களில் புதிய ஆட்சேர்ப்பு செயல்முறைகள் மீண்டுமாக எழுச்சி கண்டுள்ளது. அந்த வரிசையில் இந்தியாவின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனமான விப்ரோவும் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்புகளை கொடுத்துள்ளது. விப்ரோ நிறுவனத்தின் இந்த ஆட்சேர்ப்புக்கு பட்டதாரி பொறியாளர்கள் விண்ணப்பிக்கலாம் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதோர் கவனத்திற்கு – நாளை (நவ.25) 11வது மெகா முகாம்!
அந்த வகையில் விப்ரோவின் நொய்டா வளாகத்திற்கான ஆய்வாளர் உள்ளமைவு பணியிடங்களை ஆட்சேர்ப்பு செய்வதில் இந்நிறுவனம் ஈடுபட்டுள்ளது. இப்போது விப்ரோ நிறுவனத்தில் விண்ணப்பிக்க விரும்புபவர்கள் BCA, B.SC -IT, B.Sc-CS, BE, B-tech அல்லது MCA படிப்பை முடித்திருக்க வேண்டும். இதில் தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே வேலை நாளாக இருக்கும். இப்பதவிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள பொறியியல் பட்டதாரிகள் விப்ரோ அதிகாரப்பூர்வ இணையதளமான https://careers.wipro.com மூலம் விண்ணப்ப பதிவுகளை மேற்கொள்ளலாம்.
சென்னை: அதிரடியாக குறைந்த ஆபரணத் தங்கத்தின் விலை – நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி!
இப்போது விண்ணப்பதாரர்கள் தொழில் பிரிவுக்குச் சென்று, தாங்கள் விண்ணப்பிக்க விரும்பும் பதவிகளுக்கான இணைப்பைக் கிளிக் செய்து சரியான விவரங்களுடன் படிவத்தை நிரப்ப வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் வெற்றிகரமாக விண்ணப்பத்தை சமர்ப்பித்தவுடன், பதிவுசெய்த தொடர்பு விவரங்கள் மூலம் ஆட்சேர்ப்பு செயல்முறைகள் மற்றும் பிற விவரங்களை இந்நிறுவனம் அறிவிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.