தமிழகத்தில் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதோர் கவனத்திற்கு – நாளை (நவ.25) 11வது மெகா முகாம்!
தமிழகத்தில் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் விதமாக முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் நாளை (நவ.25) தமிழகம் முழுவதும் தடுப்பூசி முகாம் நடத்த சுமார் 50,000 மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அரசு தகவல் வெளியிட்டுள்ளது.
11வது தடுப்பூசி முகாம்:
நாடு முழுவதும் கடந்த ஆண்டு கொரோனா பெருந்தொற்று தீவிரமாக பரவியது. இந்த கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தடுப்பூசி செலுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. அந்த வகையில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு ஆகிய தடுப்பூசிகள் செலுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இந்த தடுப்பூசி செலுத்தும் பணியானது கடந்த ஆண்டு ஜனவரி மாதம் தொடங்கப்பட்டது. அத்தகைய கொரோனா தடுப்பூசியானது 18 வயதிற்கும் மேற்பட்ட அனைவருக்கும் 2 தவணைகளாக செலுத்தப்பட்டு வருகிறது. இதுவரை 100 கோடிக்கும் அதிகமான மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
சென்னை: அதிரடியாக குறைந்த ஆபரணத் தங்கத்தின் விலை – நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி!
எனினும் இன்னும் சிலர் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வதில் அலட்சியம் காட்டி வருகின்றனர். நாடு முழுவதும் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் விதமாக மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் பல்வேறு பகுதிகளில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் விதமாக முகாம்கள் நடத்த அரசு முடிவு செய்தது. அதன் பின்னர் கடந்த சில தினங்களுக்கு முன்பு முதல் தடுப்பூசி முகாம்கள் தொடர்ந்து தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் நடத்தப்பட்டு வருகிறது. இந்த முகாம் மூலம் கிராமப்புற மக்கள் பெரும்பாலானோர் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் ரூ.3000 உதவித்தொகையுடன் ஓராண்டு கால வைணவ பயிற்சி – விண்ணப்பங்கள் வரவேற்பு!
சிலர் முதல் தவணை மட்டும் செலுத்திக்கொண்டு 2வது தவணை செலுத்துவதற்கான கால இடைவெளி முடிந்த பிறகும் தடுப்பூசி செலுத்தாமல் இருந்து வருகின்றனர். அதனால் நாளை நவ.25ம் தேதி தமிழகம் முழுவதும் தடுப்பூசி முகாம் நடத்த சுமார் 50 ஆயிரம் மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னையில் மட்டும் 1,600 மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. எனவே மக்கள் அனைவரும் மற்றவர்களின் நலன் கருதி இந்த தடுப்பூசி முகாமை உரிய முறையில் பயன்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.