சென்னை: அதிரடியாக குறைந்த ஆபரணத் தங்கத்தின் விலை – நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி!
தமிழகத்தில் தங்கம் விலை கடந்த சில நாட்களாக குறைந்து கொண்டே வருகிறது. இன்றைய நிலவரப்படி ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.4,490 ஆக குறைந்துள்ளது. இவ்வாறு சவரனுக்கு ரூ.216 குறைந்துள்ளது நகைப்பிரியர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தங்கம் விலை குறைவு:
கொரோனா பெருந்தொற்றின் காரணமாக முதலீட்டாளர்கள் கவனம் பாதுகாப்பான முதலீடுகளின் பக்கம் திரும்பியது. அதனால் பங்குச்சந்தை, அமெரிக்க டாலர், ரியல் எஸ்டேட் போன்றவற்றின் மீது இருந்த முதலீடுகள் தற்போது தங்கத்தின் மீது அதிகரிக்க தொடங்கி உள்ளது. இதனால் தங்கத்தின் தேவையும் அதிகரித்தது. அதனால் தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தங்கம் விலை ஏற்ற, இறக்கத்துடன் காணப்படுகிறது.
சபரிமலை செல்லும் பக்தர்கள் கவனத்திற்கு – ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்வது எப்படி?
தங்கத்தின் விலை, சர்வேதேச கச்சா எண்ணெயின் விலை, அமெரிக்க டாலரின் மதிப்பு மற்றும் பொருளாதார நிலையில் ஏற்ற இறக்கம் ஆகியவற்றை கொண்டு தீர்மானிக்கப்படுகிறது. ஆனால் தற்பொழுது கடந்த சில நாட்களாக தங்கம் விலை குறைந்து கொண்டு வருகிறது. இதனை தொடர்ந்து இன்று ஒரே நாளில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.216 குறைந்து ஒரு சவரன் ரூ.35,920 -க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் விலை ரூ.4,490 – க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கனமழை காரணமாக 1.59 லட்சம் மீனவர்களுக்கு ரூ.3000 நிவாரணம் – மாநில அரசு அறிவிப்பு!
இதே போல் நேற்றும் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.632 குறைந்துள்ளது. இதனால் மக்கள் மிகவும் மகிழ்ச்சியுடன் நகை வாங்க ஆர்வமாக உள்ளன. இதே போல் சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளியின் விலை ரூ.1.90 குறைந்து ஒரு கிராம் ரூ.67.60 – க்கு விற்கப்படுகிறது. அதே போல் ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.67,600 – க்கும் விற்கப்படுகிறது.