மீண்டும் பழைய புன்னகையுடன் எழுந்து நின்ற “யாஷிகா ஆனந்த்” – வைரலாகும் வீடியோ! ரசிகர்கள் உற்சாகம்!
விஜய் டிவி “பிக்பாஸ் சீசன் 2” நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மக்களிடம் பிரபலமானவர் யாஷிகா ஆனந்த். அவருக்கு சமீபத்தில் விபத்து ஏற்பட்ட நிலையில் மீண்டும் பழைய நிலைக்கு திரும்பிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
பிக்பாஸ் சீசன் 2:
பிக்பாஸ் தமிழில் தொடங்கப்பட்டு இரண்டாவது சீசனில் கலந்து கொண்டவர் யாஷிகா ஆனந்த். அவர் அந்த நிகழ்ச்சியில் நல்ல வலுவான போட்டியாளராக இருந்தார். ஆனால் அவரால் வெற்றி வாய்ப்பை பெற முடியவில்லை. இந்நிலையில் மாமல்லபுரம் அருகே காரில் அதிவேகமாக ஜூலை 25 ஆம் தேதி அன்று சென்று கொண்டிருக்கும் போது, கார் யாஷிகாவின் கட்டுப்பாட்டை இழந்து நிலை தடுமாறி சாலை நடுவே இருந்த தடுப்பு சுவற்றில் மோதி உருண்டது. அதில் யாஷிகா உடன் வந்த அவர் தோழி பவானி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பலத்த காயங்களுடன் யாஷிகா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
நாக சைதன்யாவிற்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்காத சமந்தா – ரசிகர்கள் குற்றச்சாட்டு!
அவருக்கு இடுப்பு பகுதியில் காயம் ஏற்பட்டது. மேலும் பல மாதங்களாக அவர் நடக்க முடியாமல் இருந்தார். காயங்கள் குறித்து அவர் இன்ஸ்டா பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டிருந்தார். பின் டாக்டர் உதவி உடன் அவர் நடப்பது போல வீடியோ ஒன்றை வெளியிட்டார். தன்னால் தான் தன்னுடைய தோழி இறந்து விட்டார் என நினைத்து வருத்தத்துடன் புகைப்படங்களை பதிவிடுவார். சமீபத்தில் அவர் உடல்நிலை தேறி வீட்டிற்கு செல்வதாக குறிப்பிட்டிருந்தார்.
‘பிக் பாஸ்’ வீட்டை விட்டு வெளியேறும் பாவ்னி? இந்த வார எலிமினேஷன்! ரசிகர்கள் அதிர்ச்சி!
தற்போது அவர் பார்லர் சென்று முடி வெட்டி தன்னை அழகுபடுத்தி இருக்கிறார். மேலும் அந்த வீடியோவில் பழையபடி சந்தோசமாக சிரித்திருக்கிறார். அவர் மீண்டும் பழைய நிலைக்கு திரும்பியதை பார்த்த ரசிகர்கள் சந்தோஷத்தில் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அவர் விரைவில் ஒரு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள இருக்கிறார். அதற்காக தயாராகி வருவதாக தெரிகிறது. மீண்டும் அவர் படங்களில் வழக்கம் போல நடிக்க வேண்டும் என்பதே ரசிகர்களின் ஆசையாக இருக்கிறது.