மீண்டும் வெள்ளித்திரையில் தடம் பதிக்கும் பிரபல சீரியல் நடிகை – ரசிகர்கள் வாழ்த்து!
சின்னத்திரையில் பல்வேறு துணை கதாப்பாத்திரங்களில் நடித்து வரும் நடிகை மின்னல் தீபா, நடிகர் சசிகுமாரின் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘ராஜ வம்சம்’ திரைப்படத்தின் மூலம் மீண்டுமாக வெள்ளித்திரையில் தடம் பதித்திருக்கிறார்.
நடிகை தீபா
கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு முன்னர் வெளியான ‘மாயி’ என்ற திரைப்படத்தில் மின்னலாக நடித்திருப்பவர் நடிகை தீபா. இந்த திரைப்படத்தில் நடிகர் வடிவேலு பெண் பார்க்க செல்லும் போது, ‘வாம்மா மின்னலு’ என அழைக்கையில் அந்த பெண் மின்னல் போல செல்வது போன்ற காட்சிகள் இடம்பிடித்திருக்கும். இந்த காமெடி சீனில் நடித்திருப்பவர் தான் நடிகை மின்னல் தீபா. இந்த திரைப்படத்தில் கிடைத்த வரவேற்பை தொடர்ந்து சினிமாவில் நடித்து வந்த நடிகை தீபா திருமணம் செய்து கொண்டு சினிமாவை விட்டு விலகினார்.
மீண்டும் பழைய புன்னகையுடன் எழுந்து நின்ற “யாஷிகா ஆனந்த்” – வைரலாகும் வீடியோ! ரசிகர்கள் உற்சாகம்!
அந்த வகையில் கடந்த 2013ம் ஆண்டு ரமேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட நடிகை தீபாவின் இந்த திருமண வாழ்க்கை நெடு நாட்கள் நீடிக்கவில்லை. தொடர்ந்து விவாகரத்திற்கு பின்பாக மீடியாவில் தலைகாட்ட துவங்கிய நடிகை மின்னல் தீபா இந்த முறை சின்னத்திரை தொடர்களில் கவனம் செலுத்த துவங்கினார். அந்த வகையில் தற்போது சன் டிவியின் ‘சுந்தரி’ சீரியலில் நடித்து வரும் மின்னல் தீபா, மீண்டுமாக வெள்ளித்திரையில் தடம் பதித்துள்ளார்.
பிரசவத்திற்கு பிறகு ‘பாரதி கண்ணம்மா’ ஃபரீனாவின் மனதை உருக்கும் பதிவு – ரசிகர்கள் நெகிழ்ச்சி!
அதாவது நடிகர் சசிகுமார் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘ராஜ வம்சம்’ என்ற திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார் தீபா. கூட்டுக் குடும்ப வாழ்க்கையை மையாக வைத்து தயாரிக்கப்பட்டுள்ள இந்த திரைப்படத்தில் நிக்கி கல்ராணி, யோகி பாபு, சுமித்ரா, விஜயகுமார், ராதா ரவி, நிரோஷா, மனோபாலா மற்றும் சிங்கம் புலி உட்பட பல்வேறு திரைப்பட்டாளங்களுடன் இணைந்து நடித்துள்ளார் மின்னல் தீபா.