அரசு வழங்கும் கல்வி உதவித்தொகை – நவ.30 வரை கால அவகாசம் நீட்டிப்பு!
மத்திய மற்றும் மாநில அரசு உதவிபெறும் மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் கல்வி நிலையங்களில் பயிலும் சிறுபான்மை மாணவ – மாணவியருக்கு தகுதி மற்றும் வருவாய் அடிப்படையில் கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. இதற்கு விண்ணப்பிக்கும் காலம் தற்போது நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
கால அவகாசம் நீட்டிப்பு
தமிழகத்தில் சிறுபான்மை இனத்தினர் தங்களின் அன்றாட தேவைகள் பூர்த்தி செய்வது மிகவும் கடினமானது . இதில் எப்படியாவது தங்களது குழந்தைகளை படிக்க வைக்க வேண்டும் என்றும் அவர்களின் எதிர்காலம் நல்ல நிலையில் இருக்க வேண்டும் என்றும் எண்ணுவார்கள். அதை நிறைவேற்றும் பொருட்டு தமிழக அரசு சிறுபான்மை இனத்தினர்கு என்று கல்வி உதவித்தொகை தமிழ்நாடு அரசு வழங்கி வருகிறது. இதனை சிறுபான்மையினர் பெற்று கல்வி பெறலாம்.
தமிழக பள்ளிகளில் 9ம் வகுப்பு பயிலும் மாணவர்கள் கவனத்திற்கு – ஊரக திறனாய்வுத் தேர்வு அறிவிப்பு!
இந்த திட்டத்தில் 1-ஆம் வகுப்பு முதல் 12 -ஆம் வகுப்பு வரையிலும் உயர் கல்வி படிக்கும் மாணவர்களும் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவித்துள்ளது. இதன் மூலம் தங்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தி கொண்டு சமூகத்தில் ஓர் உயர்ந்த இடத்தை அடையலாம். மத்திய மற்றும் மாநில அரசு உதவிபெறும் மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் கல்வி நிலையங்களில் பயிலும் சிறுபான்மை மாணவ – மாணவியருக்கு தகுதி மற்றும் வருவாய் அடிப்படையில் கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.
தமிழகத்தில் நவ.27ம் தேதி வேலைவாய்ப்பு முகாம் – எந்த மாவட்டத்தில் தெரியுமா? முழு விபரம் இதோ!
இதனை www.scholarships.gov.in என்ற தேசிய கல்வி உதவித்தொகை இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவித்தது. இதற்கான விண்ணப்பிக்கும் காலம் 15.11.2021 என்று தெரிவித்தது. இதற்கிடையில் இதற்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க கோரி பெற்றோர்கள் அரசிடம் கோரிக்கை வைத்துள்ளன. அதனால் தற்போது விண்ணப்பிக்கும் காலம் 30.11.2021 வரை நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.