DNA டெஸ்ட் எடுத்த பாரதி, முடிவுக்கு வரும் ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் – வெண்பா சொல்வது என்ன?
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீரியல் எப்போது தான் முடியும் என்று ரசிகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு நடிகை ஃபரீனா அளித்துள்ள பதில் தற்போது அதிகம் பகிரப்பட்டு வருகிறது. அது குறித்து இந்த பதிவில் காணலாம்.
பாரதி கண்ணம்மா:
பாரதி கண்ணம்மா சீரியல் கிட்டத்தட்ட 3 ஆண்டுகளுக்கு மேலாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முன்னனி சீரியல் ஆக உள்ளது. இந்த சீரியலின் கதை சாதாரணமாக நம்ப முடியாத அளவிற்கு உள்ளது என்பது தான் பலரின் கருத்தாக உள்ளது. மருத்துவராக இருந்து கொண்டே பாரதி அர்த்தமற்ற முறையில் வீணாக சந்தேகப்படுவதாக கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். கல்லூரியில் படிக்கும் போது காதலித்த பாரதியை தனது தோழி ஹேமா காதலிக்கிறாள் என்பதை அறிந்த வெண்பா ஹேமாவை கொலை செய்து விடுகிறாள்.
‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியை விட்டு விலகும் கமல்? அடுத்து வரப்போவது யார்? அதிர்ச்சியில் ரசிகர்கள்!
அந்த விபத்தில் தான் பாரதிக்கும் அடிபட்டு விடுகிறது, இதனால் பாரதி குழந்தைக்கு அப்பாவாக முடியாது என்று போலியான ரிப்போர்ட்டை தயாரித்து கொடுக்கிறார் வெண்பா. அதனை நம்பிக் கொண்டு கர்ப்பமாக இருக்கும் தனது மனைவியை சந்தேகப்படுகிறார் பாரதி. இப்படி கதை அர்த்தமற்ற முறையில் நீண்டு கொண்டே செல்கிறது. ஒரே ஒரு DNA டெஸ்ட் எடுத்தால் கதை முடிந்து விடும் அதை விட்டு விட்டு இப்படி கதையை இழுத்துக் கொண்டு செல்வதாக இயக்குனர் மீதும் கருத்துக்கள் வைக்கப்படுகிறது.
TN TRB முதுகலை ஆசிரியர் காலிப்பணியிடங்களுக்கான போட்டித்தேர்வு – நாளை நிறைவு!
இந்நிலையில், இன்ஸ்டாகிராமில் நடிகை ஃபரீனாவின் பக்கத்தில் ரசிகர் ஒருவர் எப்போது தான் பாரதி கண்ணம்மா சீரியல் முடியும் என்று கேட்டிருக்கிறார். அதற்கு ஃபரீனா இந்த சீரியல் முடியவே வேணாம் என்று பதில் அளித்துள்ளார். இன்னும் எந்த அடிப்படையும் இல்லாமல் கதை நீண்டு கொண்டு செல்வது ரசிகர்கள் பலரை சலிப்படைய செய்துள்ளது. இப்படியே சென்றால் கதை மிகவும் போரடிக்கிறது என்றும் விமர்சனங்கள் எழுந்து வருகிறது. ஆனால் வெண்பா சீரியல் முடிய வேண்டாம் என்று சொன்னது அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.