பாரதியை கத்தியால் குத்திய கண்ணம்மா, அதிர்ச்சியில் உறைந்த சௌந்தர்யா – இதுவும் கனவு தானா?
பாரதி கண்ணம்மா தொடரில் தற்போது பாரதி மற்றும் கண்ணம்மா இருவருக்குமான விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வரும் நிலையில், யாரும் எதிர்பார்க்காத சம்பவம் ஒன்று நடந்தேறி உள்ளது. இதனால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
விவாகரத்து வழக்கு:
பாரதி கண்ணம்மா தொடரில் சமீப காலமாகவே அடுத்தடுத்து பல திருப்பங்கள் நடந்து வருகிறது. கதையில் மறைந்திருந்த ஒவ்வொரு முடிச்சுகளும் அவிழ்ந்து ஒவ்வொரு உண்மையாக தெரிந்து வருகிறது. இதனால் பாரதி கண்ணம்மா தொடர் விரைவில் முடிய இருப்பதாகவும், அதனால் கதை இறுதி கட்டத்தை எட்டிவருவதாகவும் பல தகவல்கள் பரவி வந்தது. ஆனால் அவை அனைத்தும் யூகங்களே என்பது உண்மையாகும் அளவிற்கு தற்போது கதையில் சூடு பிடித்திருக்கிறது. ஒவ்வொரு காட்சியிலும் எதிர்பாராத பல விஷயங்கள் நடந்து வருகிறது.
‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் இருந்து விலகிய ஐஸ்வர்யா வெளியிட்ட வீடியோ – ரசிகர்கள் வாழ்த்து!
பாரதி நிச்சயம் கண்ணம்மாவிடம் இருந்து விவாகரத்து பெற்று விட வேண்டும் என்ற உறுதியோடு இருக்கிறார். ஆனால் கண்ணம்மா தனது குழந்தைக்கு நிச்சயம் அப்பா பாசம் கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் உள்ளார். லட்சுமியிடம் சத்தியமாக அப்பாவிடம் உன்னை சேர்த்து வைப்பதாக கூறியுள்ளார் கண்ணம்மா. இந்நிலையில், பாரதி தொடர்ந்த விவாகரத்து வழக்கு நீதிமன்றத்திற்கு வருகிறது. அங்கு, வழக்கை விசாரித்த நீதிபதி, குழந்தையிடம் அதிக பாசம் காட்டி உங்களிடம் இருந்து பிரித்து விடுவார் என்ற காரணத்தை ஏற்க முடியாது என்று கூறுகிறார்.
இதனால் எரிச்சல் அடைந்த பாரதி தன்னிடம் உறுதியான காரணம் இருப்பதாக கூறுகிறார். தனது மெடிக்கல் ரிப்போர்ட்களை நீதிமன்றத்தில் சமர்ப்பித்து, வேறு ஒருவர் மூலம் கண்ணம்மா குழந்தை பெற்றுக் கொண்டதாக பாரதி கூறுகிறார். நீதிபதி கண்ணம்மாவிடம் என்னமா? இவர் என்ன சொல்லுகிறார் என்று கேட்க, பாரதி கூறிய விஷயத்தினால் கடும் கோபத்தில் இருக்கும் கண்ணம்மா உடனே அருகில் இருந்த காவலரின் துப்பாக்கி முனையில் இருந்த கத்தியை பிடுங்கி, பாரதியை குத்தி விடுகிறார். இதனை அங்கிருந்த யாருமே எதிர்பார்க்கவில்லை. அனைவரும் அதிர்ச்சியில் உறைந்து விடுவது போல் ப்ரோமோ வெளியிடப்பட்டுள்ளது. இந்த ப்ரோமோவினால் இன்றைய எபிசோட் குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ஆனால் இதுவும் கனவாக தான் இருக்கும் என ரசிகர்கள் கமெண்ட்டில் கலாய்த்து வருகின்றனர்.