‘பாரதி கண்ணம்மா’ வில்லி பரினாவிற்கு சுகப்பிரசவம் – தாயும், சேயும் நலமாக இருப்பதாக பதிவு! ரசிகர்கள் வாழ்த்து!
விஜய் டிவி ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் வெண்பாவாக நடித்து வரும் நடிகை பரினாவுக்கு தற்சமயம் குழந்தை பிறந்திருக்கக் கூடிய வேளையில் தனது பிரசவம் குறித்த முதல் பதிவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களுடன் பகிர்ந்துள்ளார்.
நடிகை பரினா
விஜய் டிவியின் TRP ரேட்டிங்கில் முதன்மையான இடத்தை பிடித்திருக்கும் ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் வெண்பாவாக நடித்து வருபவர் நடிகை பரினா. இந்த தொடரில் வில்லியாக நடித்து ஏகப்பட்ட விமர்சனங்களையும், திட்டுகளையும் வாங்கி தனக்கென தனி ரசிகர்களை சம்பாதித்திருக்கும் நடிகை பரினா தனது பிரசவத்துக்காக தற்போது சீரியலில் இருந்து சிறிய பிரேக் எடுத்திருக்கிறார். அதனால் ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் வெண்பாவின் கதாப்பாத்திரம் ஜெயிலில் இருப்பது போல காட்டப்பட்டுள்ளது.
திருமணத்தில் கண்கலங்கிய ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ ஐஸ்வர்யா வைஷாலி – வைரலாகும் புகைப்படங்கள்!
சொல்லப்போனால் கடந்த வாரம் வரை ‘பாரதி கண்ணம்மா’ சீரியலின் படப்பிடிப்பில் கலந்து கொண்டு வந்த நடிகை பரினா பிரசவ நேரத்திலும் கூட சில ஸ்டண்ட் காட்சிகளில் நடித்து அனைவரையும் வியக்க வைத்திருந்தார். இந்நிலையில் கடந்த நவ.15ம் தேதியன்று பிரசவத்துக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பரினாவுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்த தகவலை ‘IT’S மகன்’ என்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருந்தார் நடிகை பரினா.
இதை தொடர்ந்து பரினாவுக்கு சின்னத்திரையை சேர்ந்த பிரபலங்களிடம் இருந்து வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் இருக்கிறது. தவிர, விஜய் தொலைக்காட்சி சார்பில் பரினாவுக்கு சில பரிசுகள் வந்திருப்பதையும் அவர் தனது இன்ஸ்டா ஸ்டோரி பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். தற்போது, தனக்கு சுகப்பிரசவம் நடந்ததாகவும், தானும் தனது மகனும் நலமுடன் இருப்பதாகவும், விரைவில் ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் இணைவதாகவும் தனது ஸ்டோரி பக்கத்தில் பதிவிட்டுள்ளார் நடிகை பரினா. இந்த தகவல் அவரது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.