திருமணத்தில் கண்கலங்கிய ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ ஐஸ்வர்யா வைஷாலி – வைரலாகும் புகைப்படங்கள்!
பாண்டியன் ஸ்டோர்ஸ், நம்ம வீட்டு பொண்ணு போன்ற சீரியல்களின் மூலம் பிரபமான நடிகை வைஷாலி தனிகாவின் திருமணம் கடந்த அக்டோபர் மாதம் முடிந்துள்ள நிலையில், தனது திருமணத்தின் சில மறக்க முடியாத தருணங்களை இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார் வைஷாலி.
சிறந்த தருணங்கள்:
விஜய் டிவியில் நடிக்க தொடங்கி விட்டாலே பலரும் அறிந்த பிரபலமாக மாறிவிடலாம் என்பது எழுதப்படாத விதியாக உள்ளது. அந்த வகையில், விஜய் டிவியின் சூப்பர் ஹிட் சீரியலான ராஜாராணி சீசன் 1ல் திவ்யா என்ற கதாபாத்திரத்தில் நடித்து பலருக்கும் ஃபேவரிட் நடிகையானவர் வைஷாலி தனிகா. அதன் மூலம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. ஆனால் வைஷாலி சின்னத்திரைக்கு வருவதற்கு முன்னதாகவே, வெள்ளித்திரையில் அறிமுகம் ஆனவர். நடிகர் விஷால் நடிப்பில் வெளியான ‘கதகளி’ படத்தில் வைஷாலி நடித்துள்ளார். இதன் மூலம் காதல் கசகுதய்யா, திரி, எங்க அம்மா ராணி, கடுகு, ராஜா மந்திரி, சர்கார், பைரவா, ரெமோ போன்ற பல படங்களிலும் நடித்துள்ளார்.
சென்னையை பூர்வீகமாக கொண்ட வைஷாலி தனிகா விஜய் டிவி-யில் ஒளிபரப்பான மாப்பிள்ளை தொடரிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் கண்ணனின் ஜோடியாக ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். பின்னர், அந்த தொடரில் இருந்து விலகி நம்ம வீட்டு பொண்ணு தொடரில் நடித்து வருகிறார். இதேபோல், சன்டிவியின் மகராசி மற்றும் ஜீ தமிழில் கோகுலத்தில் சீதை என பிரபல தொலைக்காட்சிகளில் ஹிட் சீரியல்களில் நடித்து வருகிறார். வைஷாலி கடந்த அக்டோபர் மாதம் 25ம் தேதி தனது காதலர் சத்யதேவ் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
இவர்களின் காதலிற்கு வீட்டிலும் சம்மதம் அளித்திருந்த நிலையில் திருமணம் கோலாகலமாக நடைபெற்றது. அவர் திருமண நிகழ்ச்சிகளில் நடந்த பல சுவாரஸ்யமான சம்பவங்கள் மற்றும் நிகழ்வுகளையும் வீடியோக்கள், புகைப்படங்கள் என அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வைஷாலி வெளியிட்டு வருகிறார். இந்நிலையில், தற்போது தனது திருமண மேடையில் நடந்த மறக்க இரண்டு ஸ்பெஷல் மொமெண்ட்டுகளை பதிவிட்டுள்ளார். திருமணத்தில் வைஷாலி கண்கலங்கும் புகைப்படங்களும் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் அனைத்தும் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.