Post Office இல் சேமிக்க தொடங்க திட்டமிடுவோர் கவனத்திற்கு – சிறந்த 2 திட்டங்கள் இதோ!

0
Post Office இல் சேமிக்க தொடங்க திட்டமிடுவோர் கவனத்திற்கு - சிறந்த 2 திட்டங்கள் இதோ!
Post Office இல் சேமிக்க தொடங்க திட்டமிடுவோர் கவனத்திற்கு - சிறந்த 2 திட்டங்கள் இதோ!
Post Office இல் சேமிக்க தொடங்க திட்டமிடுவோர் கவனத்திற்கு – சிறந்த 2 திட்டங்கள் இதோ!

மத்திய அரசு மக்களின் நலன் கருதி பல்வேறு சிறந்த சேமிப்பு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அவ்வாறு சேமிப்பு கணக்கு தொடங்குபவர்கள் வட்டி, பணத்திற்கான பாதுகாப்பு உள்ளிட்ட விபரங்களை நன்கு அறிந்து தொடர வேண்டும்.

சேமிப்பு திட்டம்:

மத்திய அரசு மக்களின் எதிர்கால வாழக்கைக்கு உதவும் வகையில் பல்வேறு சிறந்த சேமிப்பு திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில் சேமிப்பு கணக்கை தொடங்க திட்டமிடுபவர்கள் முதலில் அந்த திட்டத்தின் மூலம் பெறப்படும் வட்டி, திட்டத்திற்கான காலம், தவணை தொகை மற்றும் தொகைக்கான பாதுகாப்பு உள்ளிட்டவைகளை நன்கு உறுதிப்படுத்திக் கொண்டு பின்னர் கணக்கை தொடருங்கள். இதற்கான பல்வேறு திட்டங்களை பற்றிய முழு விபரங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும்.

தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு 20 பொருட்களுடன் கூடிய பொங்கல் பரிசுத்தொகுப்பு – முதல்வர் அறிவிப்பு!

PPF திட்டம்: Post Office இல் இருக்கும் ஃபிக்சட் டெபாசிட் அல்லது நிலையான வைப்பு நிதித் திட்டம் பெரும்பாலான மூத்த குடிமக்களுக்கான முதல் தேர்வாக இருந்து வருகிறது. ஏனெனில் இந்த திட்டத்தில் உங்களுக்கு மாதாந்திர, காலாண்டு, அரை ஆண்டு அல்லது வருடாந்திர அளவில் நல்ல வட்டி வருமானம் கிடைக்கிறது. இந்த திட்டத்திற்கான காலம் 15 ஆண்டுகள் ஆகும். இந்த திட்டத்தின் கீழ் சேமிப்பு தொடங்கப்பட்ட 3 முதல் 6 ஆண்டுகள் கழித்து முதலீட்டாளர் ஒரு தொகையை பெற முடியும். இதற்கான முதலீடு ஆண்டுக்கு ரூ.500 வைத்தல் அவசியம். 60 வயதான முதலீட்டாளர்கள் ரூ. 15 லட்சம் வரை டெபாசிட் செய்யலாம். 5 ஆண்டுகள் மெசூரிட்டிக்கு பின்னர் கணக்கை நீட்டித்து கொள்ளலாம்.

திருச்சியில் நவ.19ம் தேதி அரசு சார்பில் வேலைவாய்ப்பு முகாம் – முன்னணி நிறுவனங்கள் பங்கேற்பு!

சுகன்யா சம்ரிதி யோஜனா திட்டம்: இந்த திட்டம் முற்றிலும் பெண் குழந்தைகளுக்கான திட்டமாகும். இந்த திட்டம் 2 பெண் குழந்தைகள் வைத்திருப்பவர்கள் தொடங்கலாம். ஒவ்வொரு பெண் குழந்தைக்கும் தனித்தனி கணக்கு தொடர வேண்டும். மேலும் குழந்தைக்கு 10 வயது முடிவதற்குள் கணக்கை தொடர வேண்டும். பெண் குழந்தையின் பெற்றோர் அல்லது பாதுகாவலர் இந்த திட்டத்தில் குறைந்தபட்சம் ரூ.250 வரை ரூ .1.5 லட்சம் வரை டெபாசிட் செய்யலாம். இந்த சேமிப்பானது 21 ஆண்டு திட்டமாகும். ஆனால் குழந்தைக்கு 18 வயது முடிவுற்ற பின் உயர்கல்வி மற்றும் திருமண தேவையின் போது பணத்தை பெற்றுக்கொள்ள முடியும்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!