தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு 20 பொருட்களுடன் கூடிய பொங்கல் பரிசுத்தொகுப்பு – முதல்வர் அறிவிப்பு!
தமிழகத்தில் வரும் 2022ம் ஆண்டு தைப்பொங்கலை முன்னிட்டு அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் பச்சரிசி, வெல்லம், முந்திரி உள்ளிட்ட 20 வகையான பொருட்கள் அடங்கிய தொகுப்புகள் வழங்கப்படும் என முதல்வர் முக ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
பொங்கல் தொகுப்பு
ஒவ்வொரு ஆண்டும் தமிழர் திருநாளான தைப்பொங்கலையொட்டி மாநிலம் முழுவதும் பொங்கல் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த பண்டிகையை அனைத்து மக்களும் சந்தோஷமாக கொண்டாட வேண்டும் என்ற நோக்கத்தில் அரசு சில பரிசுகளை ஆண்டு தோறும் வழங்கி வருகிறது. அந்த வகையில் வரும் 2022ம் ஆண்டு தைப்பொங்கலை ஒட்டி ஒவ்வொரு ரேஷன் அட்டைதாரர்களுக்கும் பொங்கல் தொகுப்புகள் வழங்கப்படும் என முதல்வர் முக ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
திருச்சியில் நவ.19ம் தேதி அரசு சார்பில் வேலைவாய்ப்பு முகாம் – முன்னணி நிறுவனங்கள் பங்கேற்பு!
அதாவது அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கு பொங்கல் வைக்க தேவையான 20 பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்படும் என முதல்வர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பின் படி, ‘தமிழர் திருநாளான தைப்பொங்கலை கொண்டாட ஒவ்வொரு குடும்ப அட்டைதாரர்களுக்கும் 20 பொருட்கள் அடங்கிய பொங்கல் தொகுப்புகளை வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
சொந்த வீடு கட்ட ஆசையா? மத்திய அரசின் ‘பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா’ திட்டம்! முழு விபரம் இதோ!
அதன் கீழ், பொங்கல் வைக்கத் தேவையான பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசிப்பருப்பு, நெய் போன்ற பொருட்களுடன் பண்டிகை கால சமையலுக்கு தேவையான மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லி தூள், கடுகு, சீரகம், மிளகு, புளி, கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு, ரவை, கோதுமை மாவு, உப்பு ஆகிய 20 மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு சுமார் 2,15,48,060 குடும்பங்களுக்கு வழங்கப்படும். இதற்காக ரூ.1,88 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.