திருச்சியில் நவ.19ம் தேதி அரசு சார்பில் வேலைவாய்ப்பு முகாம் – முன்னணி நிறுவனங்கள் பங்கேற்பு!
திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பகத்தில் தனியார் நிறுவனங்கள் பங்குபெறும் வேலைவாய்ப்பு முகாம் நவ.19ம் தேதி நடைபெற உள்ளது. இதில் ஆர்வம் உள்ளவர்கள் கலந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
வேலைவாய்ப்பு முகாம்:
நாடு முழுவதும் கொரோனா தாக்கம் தீவிரமாக இருந்து வந்த நிலையில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் பல முன்னணி நிறுவனங்கள் பெரும் பொருளாதார பாதிப்பினை கண்டது. அதன் காரணமாக பலர் தங்களது வேலையை இழந்துள்ளதால் வேலையில்லா திண்டாட்டம் தலைவிரித்தாட தொடங்கியது. இந்த நிலையில் அரசு சார்பில் மக்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தரும் நோக்கில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சொந்த வீடு கட்ட ஆசையா? மத்திய அரசின் ‘பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா’ திட்டம்! முழு விபரம் இதோ!
தற்போது திருச்சி மாவட்டத்தில் உள்ள தனியாா் நிறுவனங்கள், பொதுத்துறை நிறுவனங்களைச் சோ்ந்த வேலை வழங்குவோா் நேரடியாக வந்து தங்களுக்குத் தேவையான ஆட்களைத் தோ்வு செய்வதற்கான வேலைவாய்ப்பு முகாம் நடத்தவுள்ளனர். பல முன்னணி தனியார் நிறுவனங்கள் தகுதியான மற்றும் திறமையான ஆட்களை தேர்வு செய்ய உள்ளனர். ஆர்வமுள்ளவர்கள் இந்த வேலைவாய்ப்பு முகாமை பயன்படுத்தி கொள்ளலாம் என கூறப்படுகிறது.
நவ.19ம் தேதி அரசு பொது விடுமுறை அறிவிப்பு – மாநில முதல்வர் உத்தரவு!
ஆர்வமுள்ள 10 ஆம் வகுப்பு, பிளஸ் 2, பட்டப்படிப்பு, டிப்ளமோ, ஐடிஐ உள்ளிட்ட கல்வித்தகுதி உடையவர்கள் தங்கள் கல்வி, மதிப்பெண் சான்று, ஆதார் அட்டை ஆகியவற்றின் நகல்கள் மற்றும் 2 புகைப்படங்களுடன் வரும் வெள்ளிக்கிழமை காலை 10.30 முதல் மாவட்ட அரசு வேலைவாய்ப்பகத்தில் நடைபெறும் முகாமில் கலந்து கொள்ள அறிவுறுத்தப்படுகின்றனர். இந்த முகாம் மூலம் தனியார் நிறுவனங்களின் வேலைவாய்ப்பு பெறுவோரின் வேலைவாய்ப்பக பதிவு ரத்தாகாது என கூறப்பட்டுள்ளது. அதேபோல் முகாமில் பங்கேற்க விரும்பும் தனியார் நிறுவனங்கள் தங்கள் தேவை குறித்த விவரங்களை மாவட்ட வேலைவாய்ப்பகத்தில் நேரிலோ, தபால் மூலம் தெரிவிக்கலாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.