நவ.19ம் தேதி அரசு பொது விடுமுறை அறிவிப்பு – மாநில முதல்வர் உத்தரவு!
உத்தரபிரதேச மாநிலத்தில் நவம்பர் 19ம் தேதி அன்று கொண்டாடப்படும் கார்த்தக் பூர்ணிமா பண்டிகையை முன்னிட்டு அன்று மாநிலம் முழுவதும் பொது விடுமுறை அளிக்கப்படுவதாக முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.
பொது விடுமுறை:
தீபாவளி பண்டிகையை அடுத்து வரும் கார்த்திகை மாதத்தில் கொண்டாடப்படும் கார்த்திக் பூர்ணிமா பண்டிகை வட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் உள்ள மக்கள் சிறப்பாக கொண்டாடுவார்கள். ஒடிசா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் மிகவும் சிறப்பாக கருதப்படும் பூஜைகளில் இதுவும் ஒன்று. உத்தரபிரதேசத்தில் முன்னதாக இந்த பண்டிகைக்கு அரசு விடுமுறை அளிக்கப்படவில்லை. ஆனால் பொதுமக்கள் தொடர்ந்து அரசிடம் இது தொடர்பாக கோரிக்கையை வைத்து வந்தனர். இதனால் மாநில முதல்வர் இது தொடர்பாக முக்கிய ஆலோசனை கூட்டத்தை நடத்தினார்.
தமிழக சட்டக்கல்லூரி மாணவர்கள் கவனத்திற்கு – டிச.20 நேரடி தேர்வுகள் தொடக்கம்!
இந்த ஆலோசனையின் முடிவில் மக்களின் உணர்வுகள் மற்றும் கலாச்சாரத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் நவம்பர் 19ம் தேதி அன்று உத்தரபிரதேசத்தில் பொது விடுமுறை அளிக்கப்படுவதாக முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார். கார்த்திகை மாதத்தில் நடைபெறும் திருவிழாக்களில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்பார்கள் என்பதால் காடுகளில் தூய்மை, பாதுகாப்பு, விளக்குகள், வாகன நிறுத்தம் மற்றும் குடிநீர் போன்றவற்றுக்கு முறையான ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும் என்று முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக அரசின் செய்தி தொடர்பாளர் செய்தியாளர்களிடம் பேசியுள்ளார்.
தமிழக அரசின் இலவச வீட்டு மனை, தையல் இயந்திரம் – வருமான உச்சவரம்பு அதிகரிப்பு!
அப்போது, நவம்பர் 19 ஆம் தேதி வாரணாசியில் தேவ் தீபாவளியும், பாலியாவில் தாத்ரி கண்காட்சியும் ஏற்பாடு செய்யப்படும். மக்கள் எந்த சிரமமும் இல்லாமல் கண்காட்சிகளை ஏற்பாடு செய்வதற்கான அனுமதியைப் பெறுவதை உறுதி செய்யுமாறு முதல்வர் அதிகாரிகளை கேட்டுக் கொண்டுள்ளார். தற்போது குளிர் காலமாக உள்ளதால் கண்காணிப்பு அதிகாரிகள் உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து, நடைபாதைகள், குறுக்கு சாலைகள், சிலைகளுக்கு அடியில் யாரும் உறங்காமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.