கனவிலேயே நகரும் “பாரதி கண்ணம்மா” சீரியல் கதைக்களம் – கடுப்பான ரசிகர்கள்!
விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில், தொடர்ந்து வாராவாரம் அனைத்து திருப்பங்களும் கனவில் நடப்பது போல காட்டப்பட்டுள்ளது. இதனால் இந்த சீரியல் பார்க்கும் ரசிகர்கள் மிகுந்த கடுப்பில் இருக்கின்றனர். தொடர்ந்து இதுபோல காட்சிகள் அமைக்க என்ன காரணம்? என்பது பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
பாரதி கண்ணம்மா:
பாரதி கண்ணம்மா சீரியல் மக்கள் மனம் கவர்ந்த டாப் சீரியல் வரிசையில் இருக்கிறது. தொடர்ந்து இந்த சீரியலில், பல திருப்பங்கள் நடைபெற்று வருகிறது. ஆனால் உண்மையான திருப்பங்களை வெளியே கொண்டு வராமல் மக்களை தொடர்ந்து எதிர்பார்ப்பில் வைக்கின்றனர். இந்நிலையில், முதல் வாரத்தில் பாரதி திருந்தியது போல காட்டப்பட்டது. பலர் இது கனவாக தான் இருக்கும் என சொன்னாலும் அது நிஜத்தில் நடைபெற்றது. ஆனால் பாரதி தான் நடித்ததாகவும், இப்படி இருக்க வேண்டும் என தான் நீங்க ஆசைப்படுறீங்க என தெரிவித்தார்.
சன் டிவி தாலாட்டு சீரியல் ஒளிபரப்பு நேரம் திடீர் மாற்றம் – ரசிகர்கள் அதிர்ச்சி!
அதன் பின் அடுத்த வாரத்தில் வேணுவிற்கு நெஞ்சு வலிப்பது போலவும் நான் சாக போகிறேன் என கண்ணம்மாவை வரவழைத்து பாரதியுடன் சேர்ந்து வாழும் படி சொல்கிறார். ஆனால் அதும் கடைசியில் நடிப்பாக முடிந்தது. கண்ணம்மாவும் சேர்ந்து வாழ வாய்ப்பே இல்லை என்பது போல பேசிவிட்டார். இதனால் இரண்டாவது முறையும் ரசிகர்கள் ஏமாந்து சென்றனர். அதன் பின் மூன்றாவது முறை கண்ணம்மா பாரதியை நேரில் சந்தித்து பேசினார். அப்போது பழைய விஷயங்களை பற்றி மனம் விட்டு பேசுவது போல காட்டப்பட்டது.
ஜீ தமிழ் சத்யா & ஒரு ஊருல ஒரு ராஜகுமாரி சீரியல்களுக்கு எண்ட் கார்டு – கிளைமாக்ஸ் படப்பிடிப்பு!
ஆனால் அதுவும் இறுதியில் சேராமல் முடிய இந்த வாரம் கண்ணம்மாவிற்கு ஹேமா தான் தன்னுடைய குழந்தை என்ற உண்மை தெரிந்து விட்டது. ஆனால் கண்ணம்மாவை மிரட்டியது யார் என சௌந்தர்யா கேட்க, வெண்பா தான் என கண்ணம்மா சொல்கிறார். உடனே கோவப்பட்டு சென்ற சௌந்தர்யா வெண்பாவை துப்பாக்கியால் சுட்டு விடுகிறார். இதோட கதை முடிந்து விட்டது என நினைத்தால் கண்ணம்மாவை வெண்பா சுடுவது போல காட்டப்பட்டு அதுவும் கண்ணம்மாவின் கனவாக போய்விட்டது. இதனை பார்த்த ரசிகர்களுக்கு பல முறை ஏமாற்றப்பட்டதால் செம கடுப்பில் இருக்கின்றனர். மேலும் இனிமேல் எப்படியெல்லாம் மக்களை ஏமாற்ற இருக்கின்றனர் என புலம்பி வருகின்றனர்.
Nadagam pakkave fore adikuthu rompa kathaiya elukiringa nallave ella enga oorey pakkala nadakatha