ஜீ தமிழ் சத்யா & ஒரு ஊருல ஒரு ராஜகுமாரி சீரியல்களுக்கு எண்ட் கார்டு – கிளைமாக்ஸ் படப்பிடிப்பு!
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் முன்னணி சீரியல்களான சத்யா மற்றும் ஒரு ஊருல ஒரு ராஜகுமாரி சீரியல், விரைவில் முடிவுக்கு வர இருப்பதாக தெரிவிக்கப்பட்ட நிலையில், கிளைமாக்ஸ் காட்சிகள் குறித்த புகைப்படம் ஒன்று வெளியாகி உள்ளது.
ஜீ தமிழ் சீரியல்கள்:
தமிழ் சின்னத்திரையில் முன்னணி தொலைக்காட்சி நிறுவனமான ஜீ தமிழ், தொடர்ந்து பல சீரியல்களை ஒளிபரப்பி வருகிறது. இந்த தொலைக்காட்சியில் கடந்த 2019ம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வரும் சீரியல் சத்யா. ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் இந்த சீரியல் காதல் மற்றும் ஆண் இயல்பு கொண்ட பெண்ணான சத்யாவின் வாழ்வை மையமாக கொண்டது. இதில் ஆயிஷா மற்றும் விஷ்ணு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
விஜய் டிவி “பிக்பாஸ் சீசன் 5” 2வது ப்ரோமோ – அப்பா பற்றி பேசி அழுது புலம்பிய அபிஷேக் ராஜா!
மேலும் ஒரு ஊருல ஒரு ராஜக்குமாரி சீரியல், 1000 எபிசோட்களை கடந்து வெற்றிகரமாக ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது. இந்த இரண்டு தொடர்களும் வருகிற 24-ம் தேதியோடு முடிய போவதாக ஜீ தமிழ் சேனலில் இருந்து அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளன. இரண்டுமே மக்கள் மத்தியில் பிரபலமாக நெடுந்தொடர்கள். சுவாரஸ்யமான கதைகளுடன் சென்று கொண்டிருந்த இந்த சீரியல், திடீரென முடியப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் அதிர்ச்சியில் இருக்கின்றனர்.
விஜய் டிவி ‘பிக் பாஸ் சீசன் 5’ நிகழ்ச்சியின் முதல் எலிமினேஷன் – ரசிகர்கள் எதிர்பார்ப்பு!
இந்நிலையில் ஒரு ஊருல ஒரு ராஜகுமாரி சீரியலில் இறுதி நாள் படப்பிடிப்பு புகைப்படம் ஒன்று வெளியாகி உள்ளது. அதில் ராசாதிக்கு வளைகாப்பு போடப்பட்டுள்ளது. அதில் சத்யா சீரியல் நடிகர்களும் இருக்கின்றனர். இந்த சீரியல் பார்த்த ரசிகர்கள் இன்னும் சில நாட்கள் இந்த சீரியல்களை ஒளிபரப்புங்கள் என கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும் ஒரு சிலர் வருத்தத்துடன் கமெண்ட் செய்து வருகின்றனர்.
இரவில் ஒலி பரப்புங்கள்