2 டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டோர் கவனத்திற்கு – பூஸ்டருக்கு விரைவில் அனுமதி!
இந்தியாவில் கொரோனா தடுப்பூசி இரண்டு டோஸ் செலுத்தியவர்களுக்கு மூன்றாவதாக பூஸ்டர் தடுப்பூசி செலுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தடுப்பூசி முன்பதிவு:
இந்தியாவில் கொரோனா 2வது அலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. அதற்கு தடுப்பூசி செலுத்தியது ஒரு காரணமாக பார்க்கப்படுகிறது. தற்போது நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 25,467 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கையானது 3,24,74,773 ஆக அதிகரித்துள்ளது. அதனை தொடர்ந்து கடந்த 24 மணி நேரத்தில் 354 பேர் தொற்றால் பாதித்து இறந்துள்ளனர். இதனால் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இறந்தோரின் மொத்த எண்ணிக்கை 4,35,110 ஆக உயர்ந்துள்ளது. அதனை தொடர்ந்து கடந்த 24 மணி நேரத்தில் 14,373 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் சிகிச்சை பெறுவோரின் மொத்த எண்ணிக்கை 3,19,551 ஆக குறைந்துள்ளது. இதுவரை 58.89 கோடி கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
SBI வங்கி வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு – கணக்கு முடக்கம்? வெளியான உண்மை!
அதனை தொடர்ந்து நேற்று மட்டும் 1,39,836 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை 4,86,03,749 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் 2,00,872 பேர் தற்போது கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் பெரும்பாலானோர் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை கட்டுப்படுத்தும் விதமாக ஹைதராபாத்தில் உள்ள ‘பயோலஜிக்கல்-இ’ என்ற நிறுவனம் ‘கோர்பேவேக்ஸ்’ என்ற தடுப்பூசியை தயாரித்துள்ளது. இத்தகைய தடுப்பூசி இந்திய தலைமை மருந்து கட்டுப்பாட்டு இயக்குனரகத்தின் அனுமதியோடு 2 கட்டமாக பரிசோதனை நடத்தியுள்ளது. தற்போது 3வது கட்ட பரிசோதனைக்கு அனுமதி கோரி தலைமை மருந்து கட்டுப்பாட்டு இயக்குனரகத்திற்கு விண்ணப்பம் அனுப்பியுள்ளது.
Twitter செயலியில் சூப்பர் அப்டேட் அறிமுகம் – பயனர்கள் மகிழ்ச்சி!
அத்தகைய விண்ணப்பத்தில் தற்போது 2 டோஸ் தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து வருவதால் மீண்டும் தொற்றால் பாதிக்கபடுகின்றனர். இதனால் பல நாடுகளில் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகின்றது. இங்கு பூஸ்டர் தடுப்பூசிக்கு பதிலாக கோர்பேவேக்ஸ் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம். கோவிஷீல்டு மற்றும் கோவேக்சின் ஆகிய இரண்டில் எந்த தடுப்பூசியின் இரு தவணைகளை செலுத்தி இருந்தாலும் இந்த கோர்பேவேக்ஸ் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த தடுப்பூசியை 18 முதல் 80 வயதானவர்களுக்கு செலுத்தலாம் என்றும் ‘பயோலஜிக்கல்-இ’ நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் இந்த தடுப்பூசிக்கு விரைவில் அனுமதி கிடைத்து 3வது கட்ட பரிசோதனை தொடங்கி விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.