வங்கியில் 500 காலிப்பணியிடங்கள் – ரூ.78,230/- ஊதியம்..!
பேங்க் ஆப் மகாராஷ்டிரா வங்கியில் இருந்து வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்று சமீபத்தில் வெளியானது. இதில் காலியாக உள்ள Generalist Officer- II மற்றும் Generalist Officer-III பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் 22.02.2022ம் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
வேலைவாய்ப்பு விவரங்கள்:
- தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Generalist Officer- II மற்றும் Generalist Officer-III பணிகளுக்கென மொத்தம் 500 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
- விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் ஏதேனும் ஒரு டிகிரி அல்லது CA /CMA / CFA தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- பணியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 25 என்றும் அதிகபட்ச வயதானது 38 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
TNPSC குரூப் 2, 2A காலிப்பணியிடங்களுக்கான தேர்வு – தேதி மாற்றம்? முக்கிய கோரிக்கை!
- பணியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் பணிக்கு தொடர்புடைய துறையில் 5 ஆண்டுகள் முன் அனுபவம் கொண்டிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ. 63840 – (1990/5) – 73790 – (2220/2) – 78230 ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
- UR / EWS / OBC விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்ப கட்டணம் ரூ.1000 + GST 180 எனவும் SC / ST விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்ப கட்டணம் ரூ.100 + GST 18 என மொத்தம் 118 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ரூ.56,100/- ஆரம்ப ஊதியத்தில் அரசு வேலைவாய்ப்பு – 860+ காலிப்பணியிடங்கள்..!
Bank Of Maharastra விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 22.02.2022 ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டு இருந்தது. தற்போது அதற்கான கால அவகாசம் நாளையுடன் முடிய உள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.