ரூ.56,100/- ஆரம்ப ஊதியத்தில் அரசு வேலைவாய்ப்பு – 860+ காலிப்பணியிடங்கள்..!
மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (UPSC) ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பினை கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியிட்டது. இதில் காலியாக உள்ள Civil Services Examination பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் இதன் மூலம் விண்ணப்பித்து பயனடையலாம்.
UPSC வேலைவாய்ப்பு விவரங்கள்:
- வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Civil Services Examination பணிகளுக்கென மொத்தம் 861 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
- விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகம் அல்லது கல்வி நிலையத்தில் ஏதேனும் ஒரு டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
- விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 21 என்றும் அதிகபட்ச வயதானது 32 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பில் பல்வேறு தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளது.
TN TRB TET தேர்வர்கள் கவனத்திற்கு – முக்கிய இலக்கண குறிப்புகள்..!
- தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ஊதியமாக ரூ.56,100/- வழங்கப்படும் என்றும் அத்துடன் TA, HRA மற்றும் DA வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
- விண்ணப்பதாரர்கள் மூன்று கட்ட தேர்விற்கு பின் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல்நிலை தேர்வு (Preliminary) Objective type லும் இரண்டாம் கட்டம் (Main) எழுத்து தேர்வு மற்றும் நேர்காணலின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- SC / ST / பெண்கள் / மாற்றுத்திறனாளிகள் ஆகியவர்களை தவிர மற்ற அனைவருக்கும் ரூ.100/- விண்ணப்ப கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
டிகிரி முடித்தவர்களுக்கு ரூ.35,400/ ஊதியத்தில் அரசு வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க..!
UPSC விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 22.02.2022 தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆர்வமுள்ளவர்கள் இந்த இறுதி வாய்ப்பை பயன்படுத்தி இன்றே விண்ணப்பித்து கேட்டுக்கொள்கிறோம்.